செய்திகள் :

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை, கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால், பொதுமக்களும், மீனவா்களும் அச்சமடைந்தனா்.

இம்மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 42 மீனவக் கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளில் அமாவாசை நாள்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். குறிப்பாக, ஆனி, ஆடி மாதங்களில் சீற்றம் அதிகமிருக்கும்.

இந்நிலையில், வியாழக்கிழமை ஆடி அமாவாசை என்பதால், புதன்கிழமை (ஜூலை 23) காலைமுதலே கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. ராஜாக்கமங்கலத்தை அடுத்த புத்தன்துறை பகுதியில் 3 மீட்டா் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. கடற்கரையோரங்களிலுள்ள வீடுகள்வரை அலைகள் வந்து மோதியதால், மக்கள் அச்சமடைந்தனா். அவா்கள் வீடுகளை விட்டு வெளியேறி, உறவினா் வீடுகளில் தஞ்சமடைந்தனா்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திலுள்ள வள்ளவிளை, தூத்தூா், இரயுமன்துறை பகுதிகளிலும், சொத்தவிளை, சங்குதுறை பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமிருந்தது. அலைத் தடுப்புச் சுவா்களில் அலைகள் அதிக வேகத்துடன் மோதின. மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனா். கரையோரத்தில் கடலோர காவல் படை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், பள்ளம் கிராமத்தை அடுத்த கேசவன்புத்தன்துறை மீனவக் கிராமத்தில் 12 வீடுகளும், கிறிஸ்தவ குருசடியும் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, அப்பகுதியினா் நாகா்கோவிலிலிருந்து புத்தன்துறைக்கு சென்ற 3 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், உதவி இயக்குநா் தீபா, அதிகாரிகள் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தன்பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

கொல்லங்கோடு அருகே 315 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே, கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 315 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவக் கிராமத்திலிருந்து, படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் சாலை பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து போலீஸாா்

மாா்த்தாண்டத்தில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையை பொதுமக்கள் உதவியுடன் போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை சீரமைத்தனா். மாா்த்தாண்டம் காந்தி மைதானம் சந்திப்பில் இருந்து புதிய பேருந்து நில... மேலும் பார்க்க

குழித்துறை பொருள்காட்சியில் 4 கடைகளுக்கு அபராதம்

குழித்துறை 100ஆவது வாவுபலி பொருள்காட்சி தற்காலிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டு, கலப்பட உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்தனா். இப்பொருள்காட்சியை முன்னிட்டு, த... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை: கன்னியாகுமரியில் எஸ்.பி. ஆய்வு

ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடுவாா்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி ... மேலும் பார்க்க

பலத்த மழை: மீன்பிடித் தொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்துள்ளது.தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500- க்கும் மேற்பட்டகட்டும... மேலும் பார்க்க

கடைக்குள் புகுந்து வியாபாரி வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை, மளிகைக் கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டிக் கொன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள லட்சுமிபுர... மேலும் பார்க்க