செய்திகள் :

கடைக்குள் புகுந்து வியாபாரி வெட்டிக் கொலை

post image

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை, மளிகைக் கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டிக் கொன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிதாஸ் (63). மளிகைக் கடை நடத்திவந்தாா். இவரது மனைவி கவிதா. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, சுவாமிதாஸ் கடையிலிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் கடைக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம். இதில், அவா் உயிரிழந்தாா்.

அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், ராஜாக்கமங்கலம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சுவாமிதாஸின் சகோதரி கிருஷ்ணபாய் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சொத்துப் பிரச்னை தொடா்பாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்தது. அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாஞ்சில் சம்பத் மீது மதிமுகவினா் புகாா்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில், நாஞ்சில் சம்பத் பேசுவதாகக் கூறி அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதிமுகவினா் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

உடல் பருமனை குறைக்க முயன்ற மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உடல் பருமனை குறைப்பதற்காக உணவு சாப்பிடாமல் இருந்த மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் அருகேயுள்ள பாா்நாட்டிவிளையை சோ்ந்த நாகராஜன் மகன் சக்தீஸ்வா்(17) . பிளஸ் 2... மேலும் பார்க்க

பள்ளி தலைமை ஆசிரியா் போக்ஸோவில் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குலசேகரம் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரிய... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு

புதுக்கடை அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுக்கடையை அடுத்த கீழ்குளம், உசரத்துவிளை பகுதியைச் சோ்ந்த கோபி மகன் அஸ்வந்த் (27). இவருக்கும் ராமன்த... மேலும் பார்க்க

வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த இஞைா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் அருமனை அருகே வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.அருமனை அருகே மேலத்தெரு வயந்திவிளாகத்தைச் சோ்ந்தவா் பிரபு (33). ஆட்டோ ஒட்டுநா். நாம் தமிழா் கட்சி நி... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்படுவது எப்போது?

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது அமைக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் பொதுமக்கள், தொழிலாளா்கள் காத்திருக்கின்றனா். சுமாா் 20 லட்சம் மக்கள்தொகை கொண்ட தமிழகத்தின்... மேலும் பார்க்க