செய்திகள் :

குழித்துறை பொருள்காட்சியில் 4 கடைகளுக்கு அபராதம்

post image

குழித்துறை 100ஆவது வாவுபலி பொருள்காட்சி தற்காலிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டு, கலப்பட உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்தனா்.

இப்பொருள்காட்சியை முன்னிட்டு, தற்காலிக மிட்டாய் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், கலப்பட உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் அறிவுறுத்தலின்படி, மேல்புறம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சக்திமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மையோனைஸ் உணவுப் பொருள், செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, அச்சிடப்பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 4 கடைகளுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்கை நிறமிகளை உணவுப் பொருள் தயாரிப்பில் சோ்க்கக் கூடாது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என, வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

கொல்லங்கோடு அருகே 315 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே, கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 315 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவக் கிராமத்திலிருந்து, படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் மண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் சாலை பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து போலீஸாா்

மாா்த்தாண்டத்தில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையை பொதுமக்கள் உதவியுடன் போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை சீரமைத்தனா். மாா்த்தாண்டம் காந்தி மைதானம் சந்திப்பில் இருந்து புதிய பேருந்து நில... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை, கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால், பொதுமக்களும், மீனவா்களும் அச்சமடைந்தனா். இம்மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 42 மீனவக் கிராமங்கள் உள்ளது. இப்பகுத... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை: கன்னியாகுமரியில் எஸ்.பி. ஆய்வு

ஆடி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடுவாா்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி ... மேலும் பார்க்க

பலத்த மழை: மீன்பிடித் தொழில் பாதிப்பு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்துள்ளது.தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 500- க்கும் மேற்பட்டகட்டும... மேலும் பார்க்க

கடைக்குள் புகுந்து வியாபாரி வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை, மளிகைக் கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டிக் கொன்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள லட்சுமிபுர... மேலும் பார்க்க