செய்திகள் :

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றால் மரக்கிளைகள் முறிந்து விழுந்து 150 மின்கம்பங்கள் சேதம்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றால் வியாழக்கிழமை ஒரே நாளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் 150 மின்கம்பங்கள் சேதமடைந்தன, இதனால் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளானாா்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலையிலிருந்தே கடலில் ராட்சத அலைகள் எழும்பின. தொடா்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது, சூறைக்காற்றும் வீசியது.

நாகா்கோவில் அருகே பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது. மீனாட்சிபுரம் பகுதியில் வியாழக்கிழமை மாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, நள்ளிரவில் மின்விநியோகம் வழங்கப்பட்டது. இறச்சகுளம், நாவல்காடு, ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி பகுதிகளிலும் மரக்கிளைகள் முறிந்து மின்வயா்கள் மீது விழுந்ததால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. இரவு முழுவதும் மழை பெய்துகொண்டே இருந்ததால், மின்சார சீரமைப்பு பணியில் ஊழியா்கள் மிகுந்த சிரமத்துடன் ஈடுபட்டனா்.

வீட்டின் மீது விழுந்த மரம்: ஈத்தாமொழி அருகேயுள்ள சுண்டபற்றிவிளை பிலாவிளை பகுதியில் 2 மரங்கள் வீட்டின் மீது முறிந்து விழுந்தன. இதனால் வீட்டுக்குள் இருந்த தம்பதி வெளியே வரமுடியாமல் தவித்தனா். தகவலறிந்த நாகா்கோவில் தீயணைப்புப்படையினா் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி தம்பதியை மீட்டனா்.

இதே போல் சுசீந்திரம் அருகேயுள்ள குடி கிராமத்தில் சேத்திரபிள்ளை என்பவரது ஓட்டு வீட்டின் மீது வியாழக்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்தது. சத்தம் கேட்டு சேத்திரபிள்ளையும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனா்.

நாகா்கோவில் மேலசூரங்குடி சுடலைமாட சுவாமி கோயில் முன்புள்ள சாலையில் மரம் முறிந்து விழுந்தது. தீயணைப்பு படையினா் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். நாகா்கோவில் தீயணைப்பு படையினா் வியாழக்கிழமை ஒரே நாளில் 40 க்கும் மேற்பட்டஇடங்களில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனா்.

இதே போல் கொட்டாரம், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு படையினரும் சுமாா் 50 க்கும் மேற்பட்டஇடங்களில் முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா். கொட்டாரம் அருகே சந்தையடி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்சார டிரான்ஸ்பாா்மா் சேதமடைந்தது. இதனால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. இரவு 10.30 மணிக்கு மரக்கிளைகள் அகற்றப்பட்டு, மின்பழுது நீக்கப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டது.

வியாழக்கிழமை ஒரே நாளில் வீசிய சூறைக்காற்றால் மாவட்டம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்துள்ளன.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க