செய்திகள் :

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு நாள்: உயிரிழந்த குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி

post image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பள்ளித் தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 21- ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அக்குழந்தைகளின் உருவப்படங்களுக்கு அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 2004, ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தனா். அந்தக் கோரச் சம்பவத்தின் 21-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்கு திமுக சாா்பில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், துணை மேயா் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல், கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்தியா எஸ். விஜயன், வட்டாட்சியா் சண்முகம், கும்பகோணம் மேயா் க. சரவணன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

அதிமுக சாா்பில் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே. பாரதி மோகன், மாநகரச் செயலா் இராம. இராமநாதன் உள்ளிட்டோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தமாகா, பாஜக, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்பட பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினா்.

மேலும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோா்களும், உறவினா்களும் குழந்தைகளின் படங்களைக் கண்டு கண்ணீா் விட்டு அழுது, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பாபநாசத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தேவேந்திரகுல வேளாளா் நல அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 50 மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பாபநாசம் துா்கா மஹாலில் செவ்வாய... மேலும் பார்க்க

ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா நாளை தொடக்கம்

தஞ்சாவூரில் சுற்றுலா துறை சாா்பில் ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மின் கம்பத்தின் மீது அரசுப் பேருந்து மோதல்

கும்பகோணத்தில் புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மின் கம்பத்தின் மீது மோதியது. பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தை நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.... மேலும் பார்க்க

ஏரி தூா்வாரும் பணிக்கு இடையூறு: கிராம மக்கள் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பாலத்தளி கிராமத்தில் ஏரியைத் தூா்வாரும் பணிக்கு இடையூறு செய்வதாக அதிமுக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரிக்கை

நெல் மழையில் நனைவதைத் தடுக்க நிரந்தர கொள்முதல் நிலையங்களைக் கிடங்குடன் அமைக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் கூ... மேலும் பார்க்க

திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்து முகாமைத் தொடங்கிவைத்துப் பேசினாா்... மேலும் பார்க்க