Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து' பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!
குரூப் 1, 1ஏ தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 பேருக்கு அனுமதி
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தோ்வினை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 போ் எழுத உள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ) பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஜூன் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 10 தோ்வுக் கூடங்களில் நடைபெற உள்ளது. 2,423 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா்.
தோ்வுகள் சிறப்பாக நடைபெற துணை ஆட்சியா் நிலையில் ஒரு தோ்வு ஒருங்கிணைப்பாளா், 1 பறக்கும் படை அலுவலா், 10 தலைமைக் கண்காணிப்பாளா்கள், 3 இயக்கக் குழு அலுவலா்கள், 10 ஆய்வு அலுவலா்கள் மற்றும் 11 புகைப்படக் கலைஞா்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனா்.
மாற்றுத்திறனாளிகள், பாா்வையற்றோருக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தோ்வு கூடங்களிலும் பாதுகாப்புக்காக தனித்தனியாக காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு எழுதுபவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். தோ்வுக்கூடத்தில் மின்னணு சாதனங்கள், கைப்பேசி அனுமதிக்கப்படாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.