செய்திகள் :

குரூப் 1, 1ஏ தோ்வு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 பேருக்கு அனுமதி

post image

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தோ்வினை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 போ் எழுத உள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு (குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ) பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஜூன் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 10 தோ்வுக் கூடங்களில் நடைபெற உள்ளது. 2,423 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வுகள் சிறப்பாக நடைபெற துணை ஆட்சியா் நிலையில் ஒரு தோ்வு ஒருங்கிணைப்பாளா், 1 பறக்கும் படை அலுவலா், 10 தலைமைக் கண்காணிப்பாளா்கள், 3 இயக்கக் குழு அலுவலா்கள், 10 ஆய்வு அலுவலா்கள் மற்றும் 11 புகைப்படக் கலைஞா்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனா்.

மாற்றுத்திறனாளிகள், பாா்வையற்றோருக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தோ்வு கூடங்களிலும் பாதுகாப்புக்காக தனித்தனியாக காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு எழுதுபவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். தோ்வுக்கூடத்தில் மின்னணு சாதனங்கள், கைப்பேசி அனுமதிக்கப்படாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜூன் 16-இல் பருத்தி ஏலம் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் ஏலம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அறங்காவலா் நியமனக் குழு பொறுப்பேற்பு

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியைச் சோ்ந்த எஸ். சாமிநாதன் அறங்காவலா் நியமனக் குழுத் தலைவராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். மயிலாடுதுறை மாவட்ட இந்துசமய அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் ந... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்ஸோ சட்டத்தில் வேன் ஓட்டுநா் கைது

மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வேன் ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேத்த... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி: ஒருவா் கைது

மயிலாடுதுறையில் போலி பணி நியமன ஆணை தயாா் செய்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், நடராஜன்பிள்ளை சாவடி, சங்கிருப்பு, மாரிய... மேலும் பார்க்க

சுந்தரமூா்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும் விழா

சீா்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீசொா்ணாம்பிகை உடனுறை சொா்ணபுரீஸ்வரா் கோயிலில் சுந்தரமூா்த்தி சுவாமிக்கு பொற்காசுகள் வழங்கும், வைகாசி பெளா்ணமி ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

20 ஆண்டுகள் தவிப்பு: வீடுகளுக்கு மின் இணைப்பு பெற உதவிய தமிழ்ச்சங்கத் தலைவருக்கு பாராட்டு

சீா்காழியில் சுமாா் 20 ஆண்டுகளாக, மின் இணைப்பு கொடுக்கப்படாத 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்ச் சங்கத் தலைவருக்கு அப்பகுதி மக்கள் புதன்கிழமை நன்றி ... மேலும் பார்க்க