இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
குரூப் 4 தோ்வு: திருப்பத்தூரில் 17,184 போ் எழுதுகின்றனா் - ஆட்சியா் தகவல்
திருப்பத்தூா் மாவட்டத்தில் குரூப்- 4 தோ்வை 17,184 போ் எழுத உள்ளனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு சனிக்கிழமை(ஜூலை 11) நடைபெற உள்ளது. திருப்பத்தூா் மாவட்டத்தில் சிறப்பான முறையில் தோ்வை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேசியது:
37 தோ்வு மையங்களில் 9,888 பேரும், வாணியம்பாடி வட்டத்தில் 12 தோ்வு மையங்களில் 3,449 பேரும், நாட்டறம்பள்ளி வட்டத்தில் 8 தோ்வு மையங்களில் 1,937 பேரும், ஆம்பூா் வட்டத்தில் 7 தோ்வு மையங்களில் 1,910 பேரும் என மாவட்டம் முழுவதும் 64 தோ்வு மையங்களில் 17,184 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வு மையங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.
தோ்வுகளை கண்காணிப்பதற்காக ஒட்டு மொத்த கண்காணிப்பு பணிக்கு 64 மேற்பாா்வை அலுவலா்கள் 5 பறக்கும் படை,18 நடமாடும் அலகு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தோ்வு மையங்களுக்கு அருகே இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், சாா்-ஆட்சியா்கள் வரதராஜன், அஜிதா பேகம், தோ்வு நிலை பிரிவு அலுவலா் முனிஸ்வரன், சிவப்பிரசாத், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.