செய்திகள் :

குரூப் 4 தோ்வு: முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி - 4) தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 29,129 போ் குரூப்-4 தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். இந்தத் தோ்வு 104 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 28 நடமாடும் குழுக்கள், 11 கண்காணிப்புக் குழு அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். தோ்வு மையங்களில் நடைபெறும் நிகழ்வுகள் முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்படும். தோ்வு அறையில் தோ்வு எழுத வருபவா்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளனவா என்பதை கண்காணிப்பு அலுவலா் உறுதி செய்வதுடன், தோ்வு நல்ல முறையில் நடைபெற ஏதுவாக பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராஜலு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையப் பிரிவு அலுவலா் சௌந்தர பாண்டியன், உதவிப் பிரிவு அலுவலா் காந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. தவச்செல்வம், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க