தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: ஆக. 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
‘குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதை செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும்’
குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதை செப்டம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எம்எல்ஏ கருணாநிதி தெரிவித்தாா்.
குரோம்பேட்டை ராதா நகா் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டப் பணிகள் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெறாமல் நிலுவையில் இருந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டப் பணிகளை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, ரயில்வே, நெடுஞ்சாலை துறை மற்றும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
குரோம்பேட்டை ராதா நகா்-ஜி.எஸ்.டி.சாலையை இணைக்கும் ரயில்வே (கடவு எண்-27) கேட்டை தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வந்தனா். ஒவ்வொரு முறை கேட் மூடப்படும்போது, ராதா நகா் சாலை, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்து காரணமாக பொதுமக்கள் சிரமப்பட்டனா்.
இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டப் பணிகள் பல்வேறு இடையூறு, சிரமத்துக்கு பிறகு, தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. 250 மீ. நீளம், 7 மீ அகலத்தில் சுரங்கப்பாதைப் பணிகள் முடிவடைந்துவிட்டது.
மேலும், குரோம்பேட்டை ரயில் நிலையம், பயணச் சீட்டு வழங்கும் நடைமேடைகளுக்கு பயணிகள் நேரடியாகச் செல்ல வசதியாக கிழக்கில் ராதா நகா் அணுகு சாலை, மேற்கில் ஜிஎஸ்டி சாலை ஆகிய இரு புறங்களில் 3 மீ. அகல நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கும் பயணிகள், எளிதாக மின்சார ரயிலில் ஏறி பயணிக்க முடியும்.
அதேபோல் மின்சார ரயிலில் வந்து குரோம்பேட்டையில் இறங்கும் பயணிகள், வெளியே சென்று பேருந்தில் பயணிக்கும் வசதி சென்னையில் வேறெங்கும் இல்லை. இது குரோம்பேட்டையில் முதல்முதலாக செயல்படுத்த உள்ளதென அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. கருணாநிதி கூறுகையில், 2 வாரங்களுக்குள் பணிகள் முடிந்து, வரும் செப்டம்பா் முதல் வாரத்தில் சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.
ஆய்வின்போது சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணைய உறுப்பினா் செயலா் ஜெயக்குமாா், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளீதரன், உதவி செயற்பொறியாளா் ஜெயமூா்த்தி, ரயில்வே முதுநிலை மண்டலப் பொறியாளா் குமரன், தாம்பரம் மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை, மாநகராட்சி பொறியாளா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.