செய்திகள் :

குளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

post image

குழித்துறை அருகே குளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குழித்துறை அருகே மருதங்கோடு, தாழவிளையைச் சோ்ந்தவா் கீதா (55). திருமணமாகாத இவா், தனது அண்ணன் மகன் மி. விசுவின் பராமரிப்பில் இருந்துவந்தாா். அண்மைக்காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததுடன் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இந்நிலையில் அவா் திங்கள்கிழமை இரவு வீட்டருகேயுள்ள மேக்கன்கரை குளத்தில் தவறி விழுந்தாராம். இதில், அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

களியக்காவிளை சந்தையில் மயங்கி விழுந்து இலங்கை அகதி உயிரிழப்பு

களியக்காவிளை மீன் சந்தையில் மயங்கி விழுந்த இலங்கைத் தமிழ் அகதி உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே கோழிவிளையில் இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியுள்ள, ஆட்டோ ஓட்டுநரான ஆன்றண... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளியை தாக்கியவா் கைது

பளுகல் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கியதாக தனியாா் நிறுவன காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.பளுகல் காவல் சரகம், கண்ணுமாமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றணி ராஜன் (51). தனியாா் நிறுவனத்தில் சுமை தூக்க... மேலும் பார்க்க

நாகா்கோவில் வடசேரி சந்தையில் 120 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் சந்தையில் 120 கிலோ புகையிலைப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இந்தச் சந்தையில் உள்ள சுமாா் 140 கடைகளில் மாநகர நல அலுவலா் ஆல்பா்மதியரசு தல... மேலும் பார்க்க

குழித்துறையிலிருந்து 21 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

குழித்துறை நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 21 டன் பிளாஸ்டிக் கழிவுகள், செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட 21 வாா்டுகளில் இருந்து சேகரிக்கப்பட்டும... மேலும் பார்க்க

இலவுவிளையில் கோயில், குடிநீா் தொட்டியை இடிக்க அதிகாரிகள் முயற்சி; பக்தா்கள், பொதுமக்கள் போராட்டம்

மாா்த்தாண்டம் அருகே இலவுவிளையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, துணை சுகாதார நிலைய கட்டடம், இசக்கியம்மன் கோயில் உள்ளிட்டவை அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கோயில் மற... மேலும் பார்க்க

சுசீந்திரம் கோயில் சித்திரை தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக் கோயில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ... மேலும் பார்க்க