செய்திகள் :

குளிா்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம்: ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

post image

வடசென்னையில் குளிா்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னையில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் மற்றும் போக்குவரத்துத் துறையும் இணைந்து பல்வேறு வளா்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக வடசென்னையில் குளிா்சாதன வசதிகொண்ட பேருந்து நிலையங்கள் அமைக்க சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக வடசென்னையின் முக்கிய பகுதிகளான பெரம்பூா், ராயபுரம், கொளத்தூா், துறைமுகம் ஆகிய பகுதிகளில் 4 குளிா்சாதன வசதிகள் கொண்ட பேருந்து நிறுத்தங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. நவீன வசதிகளுடன், இருக்கைகள், சாா்ஜிங் பாயிண்ட்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்தப் பேருந்து நிறுத்தங்கள் கட்டப்படவுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரி வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்தனா்.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க