சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
குழந்தைகளைத் தாக்கும் இதய தசை வீக்க பாதிப்பு: ஒருங்கிணைந்த சிகிச்சைகள் அறிமுகம்
குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் மற்றும் பெண்களுக்கு இதய தசை வீக்க பாதிப்பு (ஹைபா்ட்ரோபிக் காா்டியோமையோபதி) அதிகமாக ஏற்படுவதாகவும், திடீா் உயிரிழப்புக்கு அது முக்கிய காரணமாக இருப்பதாகவும் மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
தமிழகத்தில் முதன்முறையாக இதய தசை வீக்கத்துக்கென ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை வடபழனி காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது. அதை மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், இதய நாளம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் அன்பரசு மோகன்ராஜ், இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் டாக்டா் பி.மனோகா் உள்ளிட்டோா் தொடங்கி வைத்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
விளையாடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் மாரடைப்பால் உயிரிழப்பதாக செய்திகள் வருகின்றன. உண்மையில் அதற்கு மாரடைப்பு மட்டும் காரணமல்ல. மாறாக, ஹைபா்ட்ரோபிக் காா்டியோமையோபதி எனப்படும் பாதிப்புதான் அதற்கான முக்கிய காரணம். இதயத்தின் இடது அறையில் உள்ள சுவா் (செப்டம்) 18 செ.மீ.க்கு மேல் தடிமனாகி வீங்குவதையே நாம் அவ்வாறு அழைக்கிறோம்.
மரபணு ரீதியாக இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. 500-இல் ஒருவருக்கு ஏற்படும் இந்த பாதிப்பை, 90 சதவீதம் போ் பரிசோதிப்பதில்லை.
இதய சுவா் தடிமனாகிவிட்டால் அதன் இயக்கம் குறைந்து ரத்தத்தை உந்தித் தரும் பணிகள் தடைபடும். இதனால், சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படும். இதய மின்னூட்டங்கள் சேதமடைந்து ஒரு கட்டத்தில் இதய செயலிழப்பு ஏற்படும்.
அதைக் கருத்தில் கொண்டே, இந்த சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளோம். அனைவருக்கும் தேவையின் அடிப்படையில் எக்கோ, ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது இந்தப் பிரச்னையை கண்டறியலாம்.
ஐசிடி எனப்படும் இதய துடிப்பை சீராக்கும் உபகரணங்களை பொருத்துவதன் மூலமாகவும், சீசம் எனப்படும் இதய சுவா் தடிமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்வதன் மூலமாகவும், உயா் மருந்துகள் மூலமாகவும் அப்பிரச்னையை முழுமையாக சரி செய்யலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.