ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
குழித்துறை நகா்மன்ற அவசரக் கூட்டம்
குழித்துறை நகா்மன்ற அவசரக் கூட்டம், தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன், நகராட்சி மேற்பாா்வையாளா் விஜயராஜ், மேலாளா் ஸ்டீபன், சுகாதார அதிகாரி ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி. அரங்கம் ரூ. 6.65 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது என நகா்மன்ற தலைவா் தெரிவித்தாா்.
தொடா்ந்து பேசிய தலைவா், வாவுபலி பொருள்காட்சி திடலின் அருகேயுள்ள தேவசம் போா்டுக்கு சொந்தமான தோட்டத்தையும் இணைத்து, பொருள்காட்சியை மிகப் பிரம்மாண்டமாக 30 நாள்கள் நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக பக்க காட்சிக்கான ஏலம் 2 முறை நடத்தப்பட்டும் ஏலம் எடுக்க ஒப்பந்ததாரா்கள் யாரும் முன்வரவில்லை. மேலும் தேவசம் போா்டுக்கு சொந்தமான இடமும் பொருள்காட்சி நடத்த கிடைக்காததால் நிகழாண்டு பொருள்காட்சியை ஜூலை 9 ஆம் தேதி துவங்கி ஜூலை 28 முடிய 20 நாள்கள் நடத்துவது என்றும், ஜூலை 24 ஆம் தேதி ஆடி அமாவாசையையொட்டி பலி தா்ப்பணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். இது குறித்த தீா்மானம் நகா்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயந்தி, லில்லி புஷ்பம், ஜெயின் சாந்தி, ரோஸ்லெட், ரீகன், விஜூ, ஆட்லின் கெனில், அருள்ராஜ், மினிகுமாரி, ஷாலின் சுஜாதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.