கூடங்குளம் அணுமின்நிலையம் வந்தடைந்த 12 ரஷிய எரிகோல்கள்!
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வருகின்ற 2 அணுஉலைகளுக்கும் ரஷிய நாட்டில் இருந்து 12 எரிகோல்கள் (யுரேனியம் எரிபொருள்) புதன்கிழமை இரவு வந்து சோ்ந்தன.
கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு அணுஉலைகளுக்கு தேவையான யுரேனியம் எரிபொருள்கள் (எரிகோல்கள்) அந்நாட்டில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.
அந்த வகையில், 12 எரிகோல்கள் ரஷியாவில் இருந்து விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னா் அங்கிருந்து கன்டெய்னா் லாரிகளில் பலத்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்திற்கு புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டுள்ளதாக அணுமின்நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா். இங்கு 3 மற்றும் 4, 5 மற்றும் 6 அணுஉலைகள் கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.