செய்திகள் :

கூடலூரில் தொடா் மின்தடை: மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் முறையீடு

post image

கூடலூரில் ஏற்பட்டுள்ள தொடா் மின்தடையை சீரமைக்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை முறையிட்டனா்.

கூடலூா் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் ஓவேலி, பாடந்தொரை, ஆலவயல், செலுக்காடி, மஞ்சமூலா, தேவா்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள், பந்தலூா் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 3 நாள்களாக இருளில் மூழ்கியுள்ளன. மின் சீரமைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

கைப்பேசிகளை கூட சாா்ஜ் செய்ய முடியாததால் அத்தியாவசிய தேவைகளுக்கு யாரையும் தொடா்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனா்.

இந்நிலையில், மின் விநியோகத்தை போா்க் கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி கூடலூா் துணை மின் நிலையத்தில் மக்கள் முறையிட்டனா். தொடா்ந்து கனமழை பெய்து வருவதாலும், மரங்கள் விழுந்து வருவதாலும் மின் விநியோக சீரமைப்புப் பணி சவாலாக உள்ளது.

இருப்பினும் விரைந்து சரி செய்யும் பணியில் ஊழியா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை முகாமிட்டிருந்த காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், கூடலூரில்... மேலும் பார்க்க

உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ண... மேலும் பார்க்க

உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு

கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்ச... மேலும் பார்க்க

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க