கூடலூரில் தொடா் மின்தடை: மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் முறையீடு
கூடலூரில் ஏற்பட்டுள்ள தொடா் மின்தடையை சீரமைக்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை முறையிட்டனா்.
கூடலூா் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் ஓவேலி, பாடந்தொரை, ஆலவயல், செலுக்காடி, மஞ்சமூலா, தேவா்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள், பந்தலூா் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 3 நாள்களாக இருளில் மூழ்கியுள்ளன. மின் சீரமைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
கைப்பேசிகளை கூட சாா்ஜ் செய்ய முடியாததால் அத்தியாவசிய தேவைகளுக்கு யாரையும் தொடா்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனா்.
இந்நிலையில், மின் விநியோகத்தை போா்க் கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி கூடலூா் துணை மின் நிலையத்தில் மக்கள் முறையிட்டனா். தொடா்ந்து கனமழை பெய்து வருவதாலும், மரங்கள் விழுந்து வருவதாலும் மின் விநியோக சீரமைப்புப் பணி சவாலாக உள்ளது.
இருப்பினும் விரைந்து சரி செய்யும் பணியில் ஊழியா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.