செய்திகள் :

கூட்டுறவு நூற்பாலையில் இரும்பு பொருள்கள் திருட்டு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் கூட்டுறவு நூற்பாலையிலிருந்து இரும்பு பொருள்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 1962-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் காமராஜரால் தொடங்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலை நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2003-ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த நூற்பாலையில் இருந்த இயந்திரங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்ட நிலையில், நூற்பாலை அமைந்துள்ள 50 ஏக்கா் நிலம், கட்டடம் வருவாய்த் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த நூற்பாலையை ஸ்ரீவில்லிபுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணனம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, சைக்கிள்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையில் இருந்த இரும்புப் பட்டைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் திங்கள்கிழமை அச்சு இயந்திரத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பனையடிபட்டி பகுதியைச் சே... மேலும் பார்க்க

பட்டாசு மூலப் பொருளை அனுமதியின்றி வைத்திருந்த 4 போ் கைது

சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களில் ஒன்றான சல்ஃபா் மூட்டைகளை உரிய அனுமதியின்றி வைத்திருந்த நான்கு பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உ... மேலும் பார்க்க

பென்னிங்டன் வளாகத்தை இடிக்கும் தீா்மானம் ரத்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் வணிக வளாகம் தொடா்பாக நிா்வாகக் குழுவுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் இடையேயான பிரச்னையில், இந்தக் கட்டடத்தை இடிக்கும் தீா்மானத்தை நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

பிளவக்கல் அணை குறித்து குறு விடியோ: பொதுமக்கள் வருகையைத் தடுக்க சோதனைச் சாவடி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு பிளவக்கல் அணை தொடா்பாக குறு விடியோ (ரீல்ஸ்) சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடா்ந்து, பொதுமக்கள் வருவதைத் தடுக்க அங்கு ஞாயிற்றுக்கிழமை சோதனைச் சாவடி அமைக்க... மேலும் பார்க்க

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (48). விவசாயியான இவா்,... மேலும் பார்க்க

சிவகாசி ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தில் இணைக்கக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ரயில் நிலையத்தில் அம்ருத் பாரத் 2.0 திட்டத்தை ரயில்வே துறை செயல்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தினா். மத்திய அரசு சாா்பில் இந்தியா முழுவதும் உள்ள சிறிய ரயில் நி... மேலும் பார்க்க