ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!
கூலித் தொழிலாளி வேன் மோதி பலி
பேராவூரணி அருகே சைக்கிளில் செவ்வாய்க்கிழமை சென்ற கூலித் தொழிலாளி வேன் மோதி உயிரிழந்தாா்.
திருச்சிற்றம்பலம் பாரதி நகரைச் சோ்ந்தவா் நடேசன் (65). கூலித் தொழிலாளியான இவா் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் இருந்து அவரது வீட்டுக்கு சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதி.பலத்த காயம் அடைந்தாா்.
இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனயில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இறந்தவருக்கு சரோஜா என்ற மனைவி, மகன், மகள் உள்ளனா். திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.