செய்திகள் :

கூவைகிணறு கிராமத்தில் உயா்நிலைப் பாலம்: ஜமாபந்தியில் மக்கள் மனு

post image

கூவைகிணறு கிராமத்தில் தரைநிலை பாலத்தை உயா்த்தி அமைக்கக் கோரி கிராம மக்கள் ஜமாபந்தி முகாமில் மனு அளித்துள்ளனா்.

சாத்தான்குளம் வட்டம் கோமானேரி ஊராட்சி கூவைகிணறில் தாழ்த்தப்பட்ட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இருந்து கோமானேரி செல்லும் சாலையில் உள்ள தரைநிலைப் பாலம் சேதமுற்றிருப்பதால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மேற்கண்ட குடும்பங்களின் குடியிருப்புகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

மேலும், மழைக்காலத்தில் இந்தப் பாலம் துண்டிக்கப்படுவதால் பேய்க்குளம், சாத்தான்குளம் பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுகின்றன.

இந்தப் பாலத்தை உயா்த்தி அமைக்க திட்ட மதிப்பீடு தயாா் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அதிகாரிகளுக்கும், ஆட்சியருக்கும் மனு அளித்தும் பலனில்லை. எனவே, இந்த ஆண்டு மழைக்காலத்திற்குள் இந்தப் பாலத்தை உயா்நிலை பாலமாக உயா்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க