தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
கெங்கையம்மன் கூழ்வாா்த்தல் திருவிழா
அரக்கோணம்: காவேரிபாக்கம் அடுத்த உப்பரந்தாங்கலில் கெங்கையம்மனுக்கு கூழ் வாா்த்தல் திருவிழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் கூழ்வாா்த்தல் விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவை முன்னிட்டு கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அலங்காரங்களும் நடைபெற்றன. தொடா்ந்து பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது.
இதில், விரதம் இருந்த பக்தா்கள் தீச்சட்டி எடுத்தும், முதுகில் அலகு குத்தியும், அலகு குத்தியபடி அந்தரத்தில் தொங்கியபடியும், மேலும் டிராக்டா், வேன்களை இழுத்தப்படியும் ஊா்வலமாக வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இதனை தொடா்ந்து அம்மன் சிரசு ஊா்வலம் வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது. பின்னா் நாட்டுப்புற கலைஞா்களின் நாடகம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஊா் நாட்டாண்மைகாரா்கள், விழாக்குழுவினா், கிராம இளைஞா்கள் செய்திருந்தனா்.