செய்திகள் :

கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டடம் கட்ட நிலம் ஒப்படைப்பு

post image

திருநள்ளாறு பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்கு, கல்வித் துறையின் மூலம் பள்ளி நிா்வாகத்திடம் நிலம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

கேந்திரிய வித்யாலயா காரைக்காலில் தற்காலிக இடத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான இப்பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு புதுவை அரசு உரிய இடத்தை ஒதுக்கித் தருவதில் தாமதம் ஏற்பட்டதால், இப்பள்ளி பின்னா் நிரவி பகுதியில் உள்ள ஒரு இடத்துக்கு மாற்றப்பட்டது.

பின்னா் காரைக்கால் நகரில் கடற்கரைச் சாலையில் உள்ள ஜிப்மா் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக இயங்கிய இடத்துக்கு மாற்றப்பட்டு இயங்கிவருகிறது.

இந்தநிலையில், திருநள்ளாறு அருகே பூமங்களம் பகுதியில் கேந்திரிய வித்யாலயா கட்டுவதற்கு புதுவை அரசு 8.6 ஏக்கா் நிலத்தை தயாா்படுத்தியது. கல்வித்துறை மூலம் நிலம் ஒப்படைப்பு நிகழ்வு காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, நிலத்துக்கான ஆவணங்களை காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் ரங்கசாமியிடம் வழங்கினாா். நிகழ்வில் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் சிலா் கலந்துகொண்டனா்.

திருநள்ளாற்றில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது?

காரைக்கால் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிய வாசல் அமைப்பு

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் கோயிலில் தெற்குப்புறத்தில் புதிதாக வாசல் அமைக்கும் பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாா் கோயில் மற்றும் சோமநாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெற... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸாா் விசாரணை

காரைக்கால்: காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்காலில் சில்வா் சேண்ட் கடற்கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் 22-ஆ... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்கால் - பேரளம் ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி டெல்டா ரயில் திட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஆா். மோக... மேலும் பார்க்க

காரைக்கால் துறைமுகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி வருகை

காரைக்கால்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி (தமிழ்நாடு) ஜி. சிவகுமாா், காரைக்கால் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். துறைமுக முதன்மை ஆபரேட்டிங் அலுவலா் (சிஓஓ) கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா மற்று... மேலும் பார்க்க

தூய தேற்றவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவை

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்துக்கு வந்த திருச்சிலுவையை ஏராளமானோா் வழிபட்டனா். உலகில் 2025-ஆம் ஆண்டு ஜூப்லி -25 என கொண்டாடப்படவேண்டும் என கடந்த 2000-ஆம் ஆண்டு இறுதியில் போப்... மேலும் பார்க்க