செய்திகள் :

கேரளத்தில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பினர்!

post image

கேரளத்தில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பினர்.

அம்மாநிலத்தில் மாசடைந்த நீரில் நீந்துவது அல்லது குளிப்பது மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்படுவது திடீரென அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 42 பேருக்கு இந்த நோய்த்தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 5 பேர் இந்நோய்த் தொற்றால் உயிரிழந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் மூளையை பாதிக்கும் அமீபா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்க, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகளைத் தூய்மையாகப் பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாமரசேரி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி அனாயா, இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆக. 14-இல் உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்த அச்சிறுமியின் உடன்பிறந்த 12 மற்றும் 7 வயதான சகோதரிகள் இருவருக்கும் அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் பூரண குணமடைந்து திங்கள்கிழமை(செப். 8) மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

தாமரசேரி பகுதியைச் சேர்ந்த மேற்கண்ட 3 குழந்தைகளும் தங்கள் வீட்டின் அருகேயுள்ளதொரு குளத்தில் குளித்ததால் அவர்களுக்கு அமீபா தொர்ற்று பரவியுள்ளது.

இதையடுத்து, கோழிக்கோட்டு அரசு மருத்துவமனையில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. அதில், 10 வயது சிறுவன், 11 வயது சிறுமியொருவரும் அடங்குவர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Brain-eating amoeba: Two children cured- the children, aged 12 and seven, respectively, are the siblings of the eight-year-old Anaya from Thamarassery, who died of the infection on August 14.

மழை-வெள்ளம்: பஞ்சாபுக்கு ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி- நேரில் ஆய்வு செய்த பின் பிரதமா் அறிவிப்பு

பஞ்சாப், ஹிமாசல பிரதேச மாநிலங்களில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த இயற்கைப் பேரிடரின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, பஞ்சாபுக்கு கூட... மேலும் பார்க்க

ராகுல் குடியுரிமையில் சந்தேகம்: வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை விசாரணை

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

பாலினத் தோ்வு தடைச் சட்ட அமலாக்கம்: பதிலளிக்க மாநிலங்களுக்கு 4 வார கெடு

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவதைத் தடை செய்யும் பாலினத் தோ்வு தடைச் சட்ட அமலாக்கத்தை மாநிலங்கள் எந்தஅளவுக்கு கையாண்டு வருகின்றன என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் செவ்வா... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் பணியாற்றியதாக இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா். இதுதொடா்பாக புது தில்லியில் அனைத்து இந்திய நிா்வாக கூட்டமைப்பின் 52-ஆவ... மேலும் பார்க்க

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு: நிபுணா்கள் எச்சரிக்கை

இந்தியாவில் இளம் வயதினரிடையே நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறை நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். ஆண்டுதோறும் இந்தியாவில் புதிதாக 81,700 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவத... மேலும் பார்க்க

மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் பயணமாக இந்தியா வருகை - பிரதமா் மோடியுடன் நாளை பேச்சு

மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம், 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் வியாழக்கிழமை (செப்.11) இருதரப்பு... மேலும் பார்க்க