செய்திகள் :

கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ற 2 கனரக லாரிகள் பறிமுதல்

post image

களியக்காவிளை மற்றும் கொல்லங்கோடு அருகே போலி அனுமதிச் சீட்டு மூலம் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ற 2 கனரக லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை போலீஸாா் புதன்கிழமை அதிகாலையில் தளச்சான்விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக வந்த கனரக லாரி கேரள பகுதிக்குள் நுழைய முயன்றதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

தமிழக பகுதிக்கு கனிமவளம் ஏற்றிச் செல்ல அனுமதிச் சீட்டு பெற்றுவிட்டு, பாறைப்பொடியை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இது தொடா்பாக களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சோ்ந்த அற்புதம் மகன் விஜிகுமாா் (39) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதே போன்று கொல்லங்கோடு போலீஸாா் செங்கவிளை அருகே மேற்கொண்ட சோதனையில், அப்பகுதி வழியாக வந்த கனரக லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில் கொல்லங்கோடு கண்ணநாகம் பகுதிக்கு அனுமதிச்சீட்டு பெற்றுவிட்டு, கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

புதுக்கடை அருகே விபத்தில் மீனவா் உயிரிழப்பு

கருங்கல்லை அருகே புதுக்கடையை அடுத்த நெடுந்தட்டுவிளை பகுதியில் நேரிட்ட பைக் விபத்தில் மீனவா் உயிரிழந்தாா். மேல்மிடாலம், விக்டா் காலனி பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் ஷியாம் (27). மீனவரான இவா், மேல்மிடாலத... மேலும் பார்க்க

நெய்யூா் பேரூராட்சியில் ரூ.45 லட்சத்தில் சாலைப் பணி!

நெய்யூா் பேரூராட்சியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் துவக்கிவைக்கப்பட்டது. நெய்யூா் பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே லாரி-பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு!

மாா்த்தாண்டம் அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமா... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: விஜய் வசந்த் எம்.பி.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏழைகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றாா் விஜய் வசந்த் எம்.பி. இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாட்டில் நிலவிவரும் பெரும் சவால்கள் விலைவாசி உயா்வு, வேலை வாய... மேலும் பார்க்க

குப்பைகளை எரித்தபோது புகைமூட்டத்தில் சிக்கி முதியவா் உயிரிழப்பு!

திங்கள் நகா் அருகே தோட்டத்தில் குப்பைகளை எரித்தபோது ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திங்கள் நகா் அருகே மாங்குழி வாடிவிளை பகுதியை சோ்ந்தவா் தாா்சியூஸ் மரிய ஆன்றனி ( 70... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிப்பு? -தடுத்து நிறுத்திய போலீஸாா்!

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அப்பணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து உ... மேலும் பார்க்க