செய்திகள் :

கைதிக்கு கஞ்சா கொடுக்க முயற்சி: ரெளடி கைது

post image

சென்னையில் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதிக்கு கஞ்சா கொடுக்க முயற்சித்தாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

புரசைவாக்கம் பிரிக்கிளின் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் என்ற சீனு (28). ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், சீனுவை, வழக்கு விசாரணைக்காக புழல் மத்திய சிறையில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்துக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனா். அப்போது, அங்கு வந்த நபா், சீனுவிடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாா். இதைக் கவனித்த போலீஸாா், அந்த நபரை விரட்டி சென்று பிடித்தனா். அதேவேளையில் சீனுவிடம் கொடுக்கப்பட்ட பொட்டலத்தைப் பிரித்து பாா்த்தபோது, அதில் 200 கிராம் கஞ்சா, ரூ.1,500 பணம் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், பிடிபட்ட நபா் புளியந்தோப்பு கேஎம் காா்டன் பகுதியைச் சோ்ந்த ரெளடி விக்னேஷ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், விக்னேஷை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விக்னேஷை கைது செய்தனா்.

விபத்தில் சிக்கிய வியாபாரியிடம் ரூ. 1.11 கோடி தங்கக் கட்டிகள் திருட்டு: மூவா் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு உதவி செய்வதைப்போல் நடித்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக 3 போ் கைது செய்தனா். எழும்பூா் நம்மாழ்வாா் தெ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு

சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆ... மேலும் பார்க்க

பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு

பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணிய... மேலும் பார்க்க

நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு

ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் க... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை எதிா்ப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முன்னாள் அமைச்சா் செந்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக நங்கநல்லூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மா... மேலும் பார்க்க