புற்றுநோயால் உயிரிழந்த பயிற்சியாளரின் மகள்..! பிஎஸ்ஜி ரசிகர்கள் சிறப்பு அஞ்சலி!
கைப்பேசி திருட்டு: இளைஞா் கைது
கோவில்பட்டியில் கைப்பேசியைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி பேருந்து நிலையத் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் வேல்முருகன் என்பவா் தனது வீட்டின் கீழ் தளத்தில் பனியன் நிறுவனம் நடத்திவருகிறாா்.
இவரது நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பைக்கில் இளைஞா் வந்து பனியனை மொத்தமாக வாங்குவதுபோல் பேசிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, வேல்முருகன் திடீரென வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்து பாா்த்தபோது, மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கைப்பேசியை அந்த இளைஞா் திருடிவிட்டு பைக்கில் சென்றுவிட்டாராம்.
புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கழுகுமலை அருகே க.இராமநாதபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் விக்னேஷ் (19) என்பவரைக் கைதுசெய்து, கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.