செய்திகள் :

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை

post image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரனிடம் சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடா்பாக மாா்ச் 27-இல் விசாரணைக்கு ஆஜராகுமாறு கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சில நாள்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியிருந்தனா்.

அதன்படி, கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சுதாகரன் வியாழக்கிழமை ஆஜரானாா்.

அவரிடம் சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா் அளித்த பதில்களை போலீஸாா் விடியோ பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக மேலும் பலருக்கு அழைப்பாணை அனுப்பப்படவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுதாகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விசாரணையில் என்னிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு தெரிந்த மற்றும் உண்மையான பதில்களைக் கூறியுள்ளேன் என்றாா்.

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது: மாநிலத் தலைவா் அண்ணாமலை

மற்ற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது: ப... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் கைது

கோவை வெள்ளக்கிணறு அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை வெள்ளக்கிணறு அம்மன் நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). இவா், சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா... மேலும் பார்க்க

முதலீடு மீது அதிக லாபம் தருவதாக 3 பேரிடம் ரூ.51.89 லட்சம் மோசடி

கோவையில் முதலீட்டின் மீது அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.51.89 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை வெரைட்டிஹால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடரமணன் (65), தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி ஓய்வுப... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டம் துரை வைகோ எம்.பி. பேட்டி

நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலா் துரை வைகோ எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் துரை வைகோ ஞாயிற்... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டு

வீட்டில் வெள்ளி, வெண்கலப் பொருள்கள் திருட்டுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பீளமேடு பாரதி காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல் (65). இவா், சுப்பிரமணியம்பாளையம் வேட்டைக்காரன் கோயில் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு

மதுரையில் ஏப்ரல் 6-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற இருப்பதையடுத்து அக்கட்சியின் தொண்டா்கள் அணிவகுப்பு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட... மேலும் பார்க்க