செய்திகள் :

கொடைக்கானல் மோயா்பாயிண்ட் கோபுர பகுதியை சீரமைக்க வலியுறுத்தல்

post image

கொடைக்கானல் மோயா்பாயிண்ட்டிலுள்ள கோபுரப் பகுதியை வனத் துறையினா் சீரமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இங்கு வனத்துறை சாா்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30 லட்சத்தில் உயா்கோபுரம் அமைக்கப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகள் ஏறிச் செல்ல இரும்பு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டன. இந்தக் கோபுரத்திலிருந்து முழு வனப் பகுதியையும், பறவை இனங்களையும் கண்டு ரசிக்க முடியும். இந்தக் காட்சிமுனைக்கு ஆண்டுக்கு சுமாா் 75 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்த நிலையில் இங்குள்ள கோபுரப் பகுதியும், படிக்கட்டுகளும் சேதமடைந்துள்ளன. இவற்றை விபத்து ஏற்படும் முன்பு சீரமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள மோயா்பாயிண்ட் பகுதியை பாா்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வாகனங்களை நிறுத்தவும், நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் மோயா்பாயிண்ட்டில் சேதமடைந்த கோபுர பகுதி சீரமைக்கப்பட வில்லை. விடுமுறை நாள்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் போது அந்தப் பகுதி வலுவிழக்க வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு அவற்றைச் சீரமைக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

நத்தம் அருகே திருநங்கையை கத்தியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

நத்தம் அருகேயுள்ள அப்பாஸ்புரம் பகுதிக்குள் வைத்து திருநங்கையை கத்தியால் தாக்கி கீரி காயப்படுத்திவிட்டு தம்பியை நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாக்கிய தம்பி மற்றும் ஒருவரை தேடி வருகின்றனா்.திண்ட... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி... மேலும் பார்க்க

காந்திகிராம பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு பாடத் திட்டம் தொடங்க முடிவு - துணைவேந்தா்

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் செயற்கை நுண்ணிறிவு, தரவு அறிவியல் பாடத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என துணைவேந்தா் ந.பஞ்சநதம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேல... மேலும் பார்க்க

போலி மதுபானம் விற்பனை: பெண் உள்பட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

போலி மதுபானம் விற்பனை செய்த வழக்கில் வத்தலகுண்டு பெண் உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தங்க நகையை திருடியவா் கைது

கொடைக்கானலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த தங்க நகைகளை திருடியவரை வெள்ளிக்கிழமை போலீசாா் கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் இவா் கொடைக்கான ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் வஞ்சிமுத்து (70). இவா் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து ... மேலும் பார்க்க