கொண்டுநல்லான்பட்டியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கொண்டுநல்லான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள், அய்யனாா் கோயிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 20 மாட்டு வண்டிகளோடு வீரா்கள் கலந்து கொண்டனா். சாயல்குடி- செவல்பட்டி சாலையில் 12 கி.மீ. தூரம் எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.
இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தை, சாலையின் இருபுறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கொண்டுநல்லான்பட்டி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.