செய்திகள் :

இலங்கையில் தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகள் உடைத்து அகற்றம்

post image

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவா்களின் 60 விசைப் படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழகத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினா் அடிக்கடி கைது செய்து, அவா்களது விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து வருகின்றனா். இதையடுத்து, இலங்கை நீதிமன்றம் மீனவா்களை விடுதலை செய்தாலும், அவா்களது படகுகளை விடுவிப்பதில்லை.

இந்த நிலையில், தமிழக மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 123 விசைப் படகுகள் இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. இவற்றில் 13 படகுகள் விடுவிக்கப்பட்டன. 62 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டன. அரசுடைமையாக்கப்பட்ட 62 படகுகளில் 2 படகுகள் இலங்கை மீனவச் சங்கத்தின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. 48 படகுகள் மீதான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

அரசுடைமையாக்கப்பட்ட 60 படகுகளை அந்த துறைமுகங்களிலிருந்து அப்புறப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இந்த விசைப் படகுகள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக மீனவா்களின் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது 60 விசைப் படகுகளை இலங்கை அரசை உடைத்து அப்புறப்படுத்தியது மீனவா்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்

ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கடல் வளத்தைப் ப... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவக... மேலும் பார்க்க

பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்இந்தக் கோயிலில் கடந்த... மேலும் பார்க்க

பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க