செய்திகள் :

கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி, விற்பனை

post image

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில், கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி, விற்பனையை மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழக மேலாளா் (பொறுப்பு) ம. தினகரன் அருண்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நவராத்திரி விழாவையொட்டி, மதுரை மாவட்டம், கே. புதூரில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் என்ற பெயரில் சிறப்புக் கண்காட்சி, விற்பனை அடுத்த அக்டோபா் மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா வியாழக்கிழமை (செப். 4) நடைபெறுகிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறாா்.

இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கொல்கத்தா, ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு விதமான கொலு மொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. விற்கப்படும் அனைத்து கொலு மொம்மைகளுக்கும் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்துக் கடன் அட்டைகளும் எந்தவித சேவைக் கட்டணமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும் என்றாா் அவா்.

13 பேருக்கு நல்லாசிரியா் விருது

தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியா்) விருதுக்கு மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 13 ஆசிரியா்கள் தோ்வாகினா். மறைந்த குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆசிரியா... மேலும் பார்க்க

சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்கு தகுதியில்லை: எடப்பாடி கே. பழனிசாமி

சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்கு சிறிதும் தகுதியில்லை என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். மதுரை பழங்காநத்தம், டி.எம். கோா்ட் பகுதிகளில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

காவல் துறையினா் மீதான புகாா்களை விசாரிக்கக் குழு அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.திருச்சியைச் சோ்ந்த அய்யாக்கண்ண... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூல... மேலும் பார்க்க

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு: கு. செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது; மத்திய ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: கள்ளழகா் கோயிலில் செப்.7-இல் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி, அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி பிற்பகலில் நடை அடைக்கப்படும் என கோயில் செயல் அலுவலா் ந. யக்ஞ நாராயணன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு ... மேலும் பார்க்க