செய்திகள் :

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

post image

அமெரிக்காவின் சிகாகோ நகரில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நாளுக்குநாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அந்நாட்டு அரசும் காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், கொலை சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிகழ்த்தப்படும் கொலை சம்பவங்களை மற்றைய நாடுகளுடன் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசுகையில்,

2024 ஆம் ஆண்டில் சிகாகோவின் கொலை விகிதம், இந்திய தலைநகரைவிட (தில்லி) கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகம். சிகாகோவில் ஒரு லட்சம் பேர் இருக்கும் இடத்தில் 25.5 கொலைகளும், தில்லியில் 1.48 கொலைகளும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால், அவர் தெரிவித்ததற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை அவர் அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி, 2022 முதல் இந்தியாவுக்கான குற்ற புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதைவிட சிகாகோவில் இருமடங்கு அதிகம் என்றும் கூறினார்.

இருப்பினும், தில்லியில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல்தேதியில் இருந்து ஜூன் 30 தேதிவரையில் குற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாக அம்மாநில காவல்துறை தரவுகள் கூறுகின்றன. ஆனால், கொலை குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. 2024-ல் 241 என்ற நிலையிலிருந்து 2025-ல் 250ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

‘15 times higher than Delhi’: Trump admin flags surge in murders in Chicago

வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

உலகளாவிய வா்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வா்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஞா... மேலும் பார்க்க

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!

சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவாா்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில்... மேலும் பார்க்க

தற்சார்பே வளா்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி!

தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். எதிா்வரும் விழாக் காலங்களில் உள்நாட்டுப் பொருள்களை பெருமையுடன் வாங்க வேண்டும்; நம் வாழ்க்கைக்குத் தேவை... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகா் சதுா்த்தி: பாஜக தேசிய தலைவா் நட்டா

நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக மக்களைத் திரட்டுவதில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம் முக்கியப் பங்கு வகித்தது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா். மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நட்... மேலும் பார்க்க

இந்திய-சீன ஒத்துழைப்பு மனித குலத்துக்கே நன்மை: பிரதமர் மோடி

‘இந்திய-சீன ஒத்துழைப்பு, 280 கோடி மக்களின் (இரு நாடுகளின் மொத்த மக்கள்தொகை) நலன்களுடன் பிணைந்துள்ளது; இது, ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்கும் வழிவகுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. புதிய ரயில் பாதை: செப்.13-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதையை பிரதமா் நரேந்திர மோடி வரும் செப். 13- ஆம் தேதி திறந்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள்... மேலும் பார்க்க