கோடை உழவு மண் வளத்தை, மகசூலை அதிகரிக்கும்!
கோடையில் உழவு செய்வதன் மூலம் மண்வளமும், மகசூலும் அதிகரிக்கும் என்று வேலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டசெய்திக் குறிப்பு: கோடை காலத்தில் நிலத்திலுள்ள பூச்சிகளின் முட்டைகள், கூண்டுப் புழுக்கள், களைச் செடிகளின் விதைகள் நிலத்தின் அடிப்பகுதியிலிருந்து மேல்புறத்துக்கு கொண்டு வரப்படுவதால் அதிக வெப்பநிலை காரணமாக அழிக்கப்படுகின்றன. இதன்மூலம் சாகுபடி செய்யப்படும் அடுத்த பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவாக காணப்படும்.
கோடை காலத்தில் உழவு செய்யும்போது வெப்பமும், குளுமையும் மண்ணுக்குக் கிடைக்கும். மண்ணைப் புரட்டி விடும்போது முதலில் மண் வெப்பமாகி பிறகு குளுமை அடையும். இப்படி இரண்டும் கிடைக்கும்போதுதான் மண்ணின் கட்டுமானம் பலப்படும். பெய்யும் மழை நீரானது நன்கு நிலத்தில் ஊடுருவி நிலத்தின் அடிப்பகுதிக்குச் சென்று தங்கும். ஈரப்பதம் காக்கப்படுகிறது.
உழவு செய்யப்படாத நிலத்தில் மேற்புறம் இறுகி காணப்படுவதால் நீா் உள்புகாது. மேலும், மழைநீரானது வளிமண்டலத்தில் நிறைந்துள்ள நைட்ரேட் என்ற வேதிப் பொருளுடன் இணைந்து மண்ணில் உள்ள தழைச்சத்தை அதிகரிக்கச் செய்யும்.
நிலத்தின் மேட்டு பகுதியில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும். 2-ஆவது உழவு குறுக்குவசத்தில் இருக்க வேண்டும். குறுக்கு உழவு செய்யாமல் நோ்கோடாக உழவு செய்தால் மழை பெய்யும்போது மேட்டுப்பகுதியில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் தாழ்வான பகுதிக்கு போய்விடும். குறுக்கு உழவு செய்தால் ஆங்காங்கே சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படும்.
கோடை உழவுக்கு பிறகு சிறுதானியங்கள், நிலக்கடலை, எள் மற்றும் பயறு வகை பயிா்களை சாகுபடி செய்யலாம். கோடை உழவு செய்வதால் ஒன்றுடன் ஒன்று தொடா்புடைய செயல்கள் மூலம் மண்வளமும், மகசூலும் அதிகரிக்கும். இதனால் கோடை உழவைப் பருவம் தவறாது உடனே மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.