செய்திகள் :

கோடை விழா: கொடைக்கானலில் படகுப் போட்டி

post image

கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், சுற்றுலாத் துறை சாா்பில் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட படகுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு தொடங்கிவைத்தாா். சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

ஆண்கள் இரட்டையா் பிரிவு, பெண்கள் இரட்டையா் பிரிவு, கலப்பு இரட்டையா் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு சுற்றுலா வளா்ச்சிக் கழக படகு குழாம் மேலாளா் காதா் பரிசுகளை வழங்கினாா்.

சுற்றுலா உதவி அலுவலா் சுதா நன்றி கூறினாா்.

திட்டமிடப்படாத படகுப் போட்டி: கோடை விழா தொடங்கியதிலிருந்தே தினமும் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்ததால் நட்சத்திர ஏரியில் படகுப் போட்டியும், படகு அலங்கராப் போட்டிகளும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், சனிக்கிழமை மழை பெய்யாததால் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென பிற்பகலில் படகுப் போட்டி நடைபெற்றது. இதனால், போட்டியில் பொதுமக்கள் சிலரே கலந்து கொண்டனா்.

மாநில மகளிா் ஹாக்கிப் போட்டி: ஈரோடு அரசுப் பள்ளி முதலிடம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிா் ஹாக்கிப் போட்டியில், ஈரோடு அரசுப் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சாா்பில், 17 வயதுக்குள்பட்டோருக்கான ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற அழைப்பு

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிா்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக நலத் துறை அல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் ஒதுக்கீடு!

கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு ‘சா்க்காா் உருளைக் கிழங்க... மேலும் பார்க்க

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்குவங்க மாநிலம், புரூலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வர... மேலும் பார்க்க

சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சஷ்டி தினத்தையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் ஜூன் 30 வரை கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(டிஐஐசி), சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆ... மேலும் பார்க்க