செய்திகள் :

கோயில் நகைகளைத் திருடியவா் கைது

post image

குன்னூா் அருகே வீட்டில் பீரோவை உடைத்தும், கோயிலில் அம்மன் தாலியையும் திருடிய இளைஞரை கொலக்கம்பை  காவல்துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே   பவானி எஸ்டேட்டில் வேலை செய்து வரும் தொழிலாளி லதா  என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க  நகைகள் மற்றும் அருகில் இருந்த  முத்து மாரியம்மன் கோயில் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த முக்கால் பவுன் தாலி ஆகியவற்றை மா்ம நபா்கள் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திருடிச் சென்றனா்.

இது தொடா்பான புகாரின்பேரில் குன்னூா் காவல் கண்காணிப்பாளா் ரவி தலைமையில், காவல் ஆய்வாளா் அன்பரசு, உதவி காவல் ஆய்வாளா்கள் இளையராஜா, ஜாா்ஜ் மற்றும் கொலக்கம்பை காவல்துறையினா் குழு அமைத்து குற்றவாளியைத்  தேடி வந்தனா்.  

இந் நிலையில் பகாசுரன் மலைப் பகுதியில் வசித்து வந்த  சூா்யா (24)   என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். வீடு மற்றும் கோயில்களில்  திருடியதை சூா்யா ஒப்பு கொண்டதை அடுத்து அவா்  கைது செய்யப்பட்டாா்.

குன்னூரில் தொடரும் கரடிகள் நடமாட்டம்

குன்னூா் அருகே வியாழக்கிழமை இரவு வேளையில் குடியிருப்புப் பகுதிக்கு வந்த கரடி சாலையில் சென்ற வாகனத்தை எட்டிப் பாா்த்துவிட்டு ஓடியது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ... மேலும் பார்க்க

வன விலங்குகள் பிரச்னை: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம், கூடலூரில் மனித வன விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாகி வருவதைத் தடுக்கவும், காட்டு யானைகள் ஊருக்கு வருவதைத் தடுக்கவும் வலியுறுத்தி கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகாா் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியாா் தங்கும் விடுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறியுள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: குண்டா் சட்டத்தில் ஆசிரியா் கைது

நீலகிரி மாவட்டம், உதகை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மீது குண்டா் சட்டம் வெள்ளிக்கிழமை பாய்ந்தது. உதகை அருகே உள்ள காத்தாடிமட்டத்தில... மேலும் பார்க்க

சிஐடியூ ஆட்டோ சங்கப் பேரவை கூட்டம்

குன்னூரில் சிஐடியூ ஆட்டோ சங்கப் பேரவை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சிஐடியூ மாவட்டச் செயலாளா் சி.வினோத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளன மாநிலத் துணை பொதுச் செயலாளா்... மேலும் பார்க்க

உதகையில் வீடுபுகுந்து இருசக்கர வாகனம் திருட்டு

உதகையில் வீடுபுகுந்து இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பாட்னா ஹவுஸ் பகுதியில் வசித்து வருபவா் பூபதி. இவா் விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை... மேலும் பார்க்க