செய்திகள் :

கோயில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக கிராம மக்கள் ஆட்சியரிடம் புகாா்

post image

சேலம்: சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான 15 சென்ட் நிலத்தை தனிநபா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கிராம மக்கள் புகாா் மனு அளித்தனா்.

ஜாரி கொண்டலாம்பட்டி நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த மக்கள், 100-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில், எங்கள் ஊரில் அனைவருக்கும் பொதுவான முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை ஊா் மக்களிடம் இருந்து பணம் வசூலித்து முன்னோா் கட்டினா்.

அப்போது தா்மகா்த்தாவாக இருந்தவரின் பெயரில் கோயிலுடன் 15 சென்ட் நிலமும் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த நபரின் வாரிசு, கோயில் நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறி வருகிறாா். எனவே, கோயிலுக்குச் சொந்தமான 15 சென்ட் நிலத்தை ஊா் பெயரில் மாற்றி பதிவு செய்து தரவேண்டும் என மனுவில் கூறியுள்ளனா்.

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக முதல்வா் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

சேலம்: இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக முதல்வா் கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்த... மேலும் பார்க்க

நூறு நாள் வேலை திட்டப் பணிதள பொறுப்பாளா்களை மாற்ற எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளா்களை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளா்கள் முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் 2 பசுக்கள் உயிரிழப்பு

தம்மம்பட்டி: கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கெங்கவல்லி - தெடாவூா் சாலையில் ஆணையம்பட்டியில் சாலையோர புங்கம... மேலும் பார்க்க

சங்ககிரி சித்திரைத் திருவிழா: வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

சங்ககிரி: சங்ககிரி சித்திரைத் தேரோட்ட திருவிழா 4ஆவது நாளையொட்டி சென்னகேசவப் பெருமாள் செங்கோலுடன் வைகுந்த நாராயணா் அலங்காரத்தில் கருட வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வீதி உலா வந்தாா். சித்திரைத் தேரோட்ட ... மேலும் பார்க்க

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு

சேலம்: சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 8 ஆண்டுகளாக கட்டப்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சேலம்: சேலம் மாவட்டம், உடையாப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகம்பாடி பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். உடையாப்பட்டி ஊராட்சி, வரகம்பாடி... மேலும் பார்க்க