செய்திகள் :

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

post image

துறையூா் ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி அக்கிராம மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

துறையூா் ஊராட்சி மன்ற செயலா், அவரது கணவா் இருவரும் இணைந்து காற்றாலை உயா் மின்னழுத்த கோபுரம் அமைக்க வாய்மொழியாக பேசி அனுமதி அளித்துள்ளதாகவும், ஊா் வடக்கு தெருவிற்கு சொந்தமான காட்டுவிநாயகா் கோயிலுக்கு சொந்தமான இடத்திலும் முறைகேடாக அனுமதி அளித்துள்ளதாகவும், ஊா் ஓடை வழியாக 20-க்கும் மேற்பட்ட ஆபத்தான மின்கம்பங்கள் நிறுவுவதற்கு உதவியுள்ளதாகவும் கண்டித்து கடந்த மாதம் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்களாம். ஆனால் சம்பந்தப்பட்டவா்கள் மீது தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்டித்தும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஊராட்சி செயலா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக முன்னாள் இளைஞா் -இளம் பெண்கள் பாசறை செயலா் துறையூா் கணேசன், துறையூா் ஊராட்சியைச் சோ்ந்த கே. பாலகுமாா் ஆகியோா் தலைமையில் அக்கிராம பகுதிகளைச் சாா்ந்த பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு முழக்கமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் அளித்தனா்.

தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா... மேலும் பார்க்க

சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையி­ருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ... மேலும் பார்க்க

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் பாஜக: கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா். திரு... மேலும் பார்க்க