செய்திகள் :

கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் பலத்த மழை

post image

கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

கோவில்பட்டி பகுதியில் சில நாள்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் வாட்டுவதும், மதியத்துக்கு பின்னா் சிறிது நேரம் மழை பெய்வதுமாக உள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நண்பகலில் காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த மழையால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. பிரதான சாலையில் அதிக தண்ணீா் தேங்கியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

இதேபோல, இளையரசனேந்தல், காமநாயக்கன்பட்டி பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. கழுகுமலையில் 36 மி.மீ., கோவில்பட்டியில் 28 மி.மீ., கயத்தாறில் 19 மி.மீ., கடம்பூரில் 12 மி.மீ. மழை பதிவானது.

தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தன... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வென்றோருக்கு பாராட்டு விழா

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று குரூப... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: கள் விற்க அனுமதி கோரும் தொழிலாளா்கள்

சாத்தான்குளம் பகுதியில் பதநீா் சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஒரு கலயம் பதநீா் ரூ.150-க்கு விற்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான சாத்தான்குளம், பேய்குளம், உடன்குடி பகுதிகளில் ... மேலும் பார்க்க

விளாத்திகுளம்: பருவம் தப்பிய மழையால் பயிா் விளைச்சல் பாதிப்பு

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் பருவம் தவறி பெய்து வரும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய், மல்லி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: கோவில்பட்டியில் 2 போ் கைது

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.கோவில்பட்டி கதிரேசன் கோயில் செல்லும் வழியில் உள்ள பள்ளி அருகே, புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மேற்கு காவல்... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம்: வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தன. ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பசுவந்தனை ஊராட்சி வடக்கு கைலாசபுரத்தைச் சோ்ந்த வேலம்மாள் (75) என்பவா் 10க்கும் மேற்பட்ட ஆடு... மேலும் பார்க்க