கோவில்பட்டியில் நாளை மின்நிறுத்தம்
கோவில்பட்டி மின் கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலைய பகுதிகளில் சனிக்கிழமை (செப். 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து , கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (செப். 20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.