செய்திகள் :

கோவை அருகே ரயில் மீது கல்லெறிந்த 15 வயது சிறுவன் கைது

post image

கோவை அருகே ரயில் மீது கல்லெறிந்த வழக்கில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கோவை போதனூர் – இருகூர் இடையே சென்ற சரக்கு ரயிலின் இயந்திர கண்ணாடி மீது கல்லெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் போதனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது. சம்பவத்தில் இருந்து 24 மணி நேரத்துக்குள் சிறுவன் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ரயில் மீது கல்லெறிந்ததை சிறுவன் ஒப்புக்கொண்டான்.

சென்னையில் மேகவெடிப்பு: மணலியில் அதிகபட்சமாக 271.5 மி.மீ. மழைப் பதிவு

பின்னர் அச்சிறுவன் கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். நீதிமன்ற உத்தரவின் பேரில், சிறுவனை சைல்ட் வெல்ஃபேர் கமிட்டி இடம் ஒப்படைத்தனர். அங்கு சிறுவனுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளும், படிப்பைத் தொடரும் வாய்ப்பும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A 15-year-old boy has been arrested near Coimbatore in connection with a case of stone-throwing at a train.

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நன்னீர... மேலும் பார்க்க

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க

முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்! டிஎன்பிஎஸ்சி-யின் குளறுபடி!

டிஎன்பிஎஸ்சி தேர்வின் கேள்வித் தாளில், அய்யா வைகுண்ட சுவாமியின் பெயரைத் தவறுதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.டிஎன்பிஎஸ்சி-யின் கவனக் குறைவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்... மேலும் பார்க்க

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

2026 தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய் தற்போதுதான் அரசியல் இயக்கத்தை ஆரம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் இனி ஒரே நுழைவுக் கட்டணம்

கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, இனி அனைத்து இடங்களுக்கும் சேர்த்து ஒரே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு நிலவியது. சென்னை சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் கவனிப்பாரற்று உலோகப் பெட்டி திங்கள்கிழமை கிடந்தது. உடனே தகவல் கிடைத்ததும், சம்பவ ... மேலும் பார்க்க