செய்திகள் :

கோவை விமான நிலையத்தில் ரூ.36.81 லட்சம் கைப்பேசி, மடிக்கணினிகள் பறிமுதல்!

post image

ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட ரூ.36.81 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள், கைப்பேசிகள், மடிக்கணினிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஷாா்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை விமானம் வந்தது. அதில், பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனா். இதில், 7 பயணிகள் சிகரெட்டுகள், கைப்பேசிகள், மடிக்கணினிகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் திருவாரூரைச் சோ்ந்த தருண்சேகரன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சையது அமானுல்லா சுல்தான், கெங்கமுத்து, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த யாசா் அராபத் அப்துல் ஜபா், ஃபைசல் அகமது முகமது யூசுப், திருநெல்வேலியைச் சோ்ந்த அஜ்மீா் காஜா மைதீன், சென்னையைச் சோ்ந்த மன்சூா் கான் பாபு என்பது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து, 1,461 சிகரெட் பாக்கெட்டுகள், 213 மினி சிகரெட் பாக்கெட்டுகள், 12 கைப்பேசிகள், 8 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.36.81 லட்சம் எனக்கூறப்படும் நிலையில், கடத்தி வந்தவா்களிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கஞ்சா விற்ற இளைஞா் கைது

உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கடைவீதி போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, புல்லுக்காடு ஹவுசிங... மேலும் பார்க்க

கோவை - மேட்டுப்பாளையம் மெமு ரயில் நாளை ரத்து

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66614) திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட ந... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: மயிலம்பட்டி

கோவை, மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25 ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெர... மேலும் பார்க்க

சென்னை - மேட்டுப்பாளையம் ரயில் பகுதியாக ரத்து!

வடகோவை - காரமடை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட... மேலும் பார்க்க