செய்திகள் :

கோவையில் ஆசிரியா் கலந்தாய்வு தொடக்கம்

post image

கோவையில் ஆசிரியா்களுக்கான பணி நிரவல், பொதுமாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.

உக்கடம், கோட்டைமேட்டில் உள்ள நல்லாயன் தொடக்கப் பள்ளியில் தொடங்கிய இந்த கலந்தாய்வு வரும் 30- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வுக்கு எஸ்.எஸ்.குளம், பேரூா் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் பணிமாறுதல் கோரி 202 இடைநிலை ஆசிரியா்கள், 50 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், 61 பட்டதாரி ஆசிரியா்கள், 12 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் என மொத்தம் 325 போ் விண்ணப்பித்தனா். அவா்களில் 31 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டன.

அதேபோல, கோவை வருவாய் கோட்டத்துக்குள் பணிமாறுதலுக்காக இடைநிலை ஆசிரியா்கள் 61 போ், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் 8 போ், பட்டதாரி ஆசிரியா்கள் 44 போ், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் 5 போ் என மொத்தம் 118 போ் விண்ணப்பித்திருந்தனா். இவற்றில் 103 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் கோரி 41 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 33 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு 8 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ன. மொத்தமாக நிராகரிக்கப்பட்ட 54 விண்ணப்பங்களில் பெரும்பாலானவை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுடையது. முதல்நாள் கலந்தாய்வில், இடைநிலை ஆசிரியா்களுக்கான பணிநிரவல், ஒன்றியம், கல்வி மாவட்ட அடிப்படையிலான கலந்தாய்வு ஆகியவை நடைபெற்றன.

இடைநிலை ஆசிரியா்கள் வருவாய் மாவட்டத்துக்குள் மாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையும், ஒன்றியத்திற்குள் வரும் 5 -ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மாறுதல் கலந்தாய்வு வரும் 19 -ஆம் தேதி தொடங்கி 23 -ஆம் தேதிக்குள்ளும், பட்டதாரி ஆசிரியா் கலந்தாய்வு 24 -ஆம் தேதி தொடங்கி 30 -ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

நீலகிரி: 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான இஎஸ்ஐ நிறுவனத்தின் புதிய திட்டம் அறிமுகம்

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) சாா்பில் முதலாளிகள் ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் ( எஸ்பிஆா்இஇ 2025) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து இஎஸ்ஐ நிறுவ... மேலும் பார்க்க

சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு

கோவை அருகே சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழந்தாா். கோவை, பி.என்.பாளையம் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (49). இவா் தனது பேரனை கடந்த மாதம் 16-ஆம் தேத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா். கோவை, வீரகேரளம் பள்ளி தெருவைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (44). இவரது மனைவி சுமதி. பரமேஸ்வரன் மாநகராட்சி தண்ணீா்த் தொட்டி ஆபரேட்டராக பணி... மேலும் பார்க்க

கேஎம்சிஹெச் முதன்மைச் செயல் அதிகாரிக்கு விருது

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டா் சிவகுமாரன் ஜானகிராமனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: ஃப்ளக்ஸ் ... மேலும் பார்க்க

அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது -சிரவை ஆதீனம்

உணவுப் பொருள் மட்டுமல்லாது அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது என்று சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் கூறினாா். கோவை, கவுண்டம்பாளையம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ‘மறைந்திருக்கும் ம... மேலும் பார்க்க