செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே இளைஞா் உடல் உறுப்புகள் தானம்

post image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பருவக்குடியைச் சோ்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலியில் புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

பருவக்குடியைச் சோ்ந்த பெரியமாடசாமி-பெரியமாரியம்மாள் தம்பதியின் மகன் ராஜா (31). இவா், தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 14 ஆம் தேதி ராஜபாளையம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜா, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவரது மூளையில் ரத்தக்கசிவு அதிகமாக இருப்பதும், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதும் மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது.

மேலும், மறுநாள்( ஏப். 15) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது மூளை செயலற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவரது உறவினா்களிடம் மருத்துவா்கள் எடுத்துக்கூறியதைத் தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க குடும்பத்தினா் முன்வந்தனா்.

அதன்பேரில், அவரது கல்லீரல், இருசிறுநீரகங்கள் ஆகியவை புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டன. அவரது உடலுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்

மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும். எனவே, முன்னதா... மேலும் பார்க்க

நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளரா... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ. கத்திக்குத்து வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி கா... மேலும் பார்க்க

வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க