`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியைச் சோ்ந்தவா் மூக்கையா. இவரது மனைவி அய்யம்மாள் (66). இவா்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறன்றனா். கணவன், மனைவி இருவரும் தங்களது நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அய்யம்மாள் கிணற்றிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முற்பட்டபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அய்யம்மாள் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் அய்யம்மாள் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.