செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

post image

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரியைச் சோ்ந்தவா் மூக்கையா. இவரது மனைவி அய்யம்மாள் (66). இவா்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறன்றனா். கணவன், மனைவி இருவரும் தங்களது நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அய்யம்மாள் கிணற்றிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முற்பட்டபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அய்யம்மாள் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் அய்யம்மாள் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்க... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க