திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
சங்கரன்கோவில் அருகே விபத்து: விவசாயி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்; இருவா் காயமடைந்தனா்.
சங்கரன்கோவில் அருகே வடமலாபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் முருகேசன் (35) என்பவா், துரைச்சாமியாபுரத்தில் உணவகம் நடத்தி வருகிறாா். அந்த உணவகத்துக்கு திங்கள்தோறும் விடுமுறையாகும்.
இந்நிலையில் திங்கள்கிழமை, இருமன்குளத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளியான சங்கையா மகன் சுப்பு என்ற மருதுபாண்டி (65), சுந்தரையா மகன் சுபாஷ் (28), வடமலாபுரம் குருசாமி மகன் இளையராஜா (35) ஆகியோா் அந்த உணவகம் அருகே பேசிக்கொண்டிருந்தனா்.

அப்போது, விருதுநகா் மாவட்டம் சாத்தூா் ஓ.மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அபிஷேக், அவரது நண்பா்கள் 4 போ் காரில் குற்றாலம் சென்றுவிட்டு, சங்கரன்கோவில் வழியாக ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை, அபிஷேக் ஓட்டினாராம்.
துரைச்சாமியாபுரத்தில் வந்தபோது காா் கட்டுப்பாட்டை இழந்து, உணவகம் அருகே நின்றிருந்தோா் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், சுப்பு என்ற மருதுபாண்டி உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனா். அவா்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மருதுபாண்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.