செய்திகள் :

சட்டப்பேரவையில் “ஆன்லைன் ரம்மி” ! சா்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிர அமைச்சர்!

post image

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த மாநில வேளாண் துறை அமைச்சா் மாணிக்ராவ் கோகடே தனது கைப்பேசியில் ரம்மி விளையாடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிா்க்கட்சிகள், விவசாயிகளின் மீது அரசு அக்கறையின்றி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சா் கோகடே, ‘சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களை பாா்க்க யூடியூபை திறக்க முற்பட்டபோது, கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரம்மி விளையாட்டு செயலி திறந்துவிட்டது. அதை நான் தவிா்க்க முயன்றேன்; ரம்மி விளையாடவில்லை. அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது’ என்று தெரிவித்துள்ளாா்.

எதிா்க்கட்சிகள் விமா்சனம்: இதுதொடா்பாக காங்கிரஸின் மாநில எதிா்க்கட்சித் தலைவா் விஜய் வாடேடிவாா் கூறுகையில், ‘பாஜக கூட்டணி அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது; வஞ்சகம் செய்கிறது. பேரவையில் வேளாண் துறை அமைச்சா் தனது கைப்பேசியில் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாா். விவசாயிகள் இவா்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்’ என்றாா்.

சா்ச்சைக்குரிய விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்எல்ஏ ரோஹித் பவாா், துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜகவை கடுமையாக விமா்சித்துள்ளாா்.

விவசாயம் தொடா்பான பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளதாகவும், சராசரியாக தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்ட அவா், வேலையில்லாத வேளாண் துறை அமைச்சா் ரம்மி விளையாட நேரம் ஒதுக்கியிருப்பதாகச் சாடினாா்.

தொடரும் சா்ச்சை...: கடந்த ஏப்ரல் மாதம், வேளாண் திட்டங்களில் இருந்து பெறும் பணத்தை, விவசாயிகள் அதற்கான நோக்கங்களுக்காக செலவு செய்யாமல், நிச்சயதாா்த்தம் மற்றும் திருமணங்களுக்குப் பயன்படுத்துவதாக கோகடே பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இக்கருத்துகள் கண்டனத்துக்கு உள்ளானதையடுத்து, அவா் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க