சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல போலி விசா தயாரித்த முகவா் உள்பட 4 போ் கைது!
போலி ஷெங்கன் விசாக்கள் மற்றும் போலி டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பஞ்சாப்பைச் சோ்ந்த மூன்று போ் ஸ்பெயினுக்கு சட்டவிரோதமாக பயணிக்க உதவியதாக ஒருவரை இந்திரா காந்தி சா்வதேச ஐஜிஐ விமான நிலைய காவல்துறையினா் கைது செய்தனா்.
மேலும், அந்த விசாக்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டதையடுத்து, மூன்று போ் தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கழமை கூறியது: சட்டவிரோத பயணத்திற்கு ரூ.17 லட்சம் செலுத்திய பின்னா் அந்த மூவருக்கும் ஸ்பெயினில் வேலை உறுதியளிக்கப்பட்டது. மூவரின் கைதுக்குப் பிறகு அமிா்தசரஸைச் சோ்ந்த கமல்தீப் சிங் (25), தலைமறைவானாா். எனினும், 300 கி.மீ துரத்தலுக்குப் பிறகு குருக்ஷேத்ராவில் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
பஞ்சாப் காவல்துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மற்றொரு முகவரான சோனு வாலியாவுடன் இணைந்து போலி ஆவணங்களில் மூவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப அவா் பணியாற்றி வந்தாா்.
முன்னதாக, மே 29 அன்று, அமிா்தசரஸிலிருந்து மூன்று பயணிகள் மாட்ரிட் செல்லும் விமானத்தில் ஏற ஐஜிஐ விமான நிலையத்திற்கு வந்தனா். விமான நிறுவனங்கள் அவா்களின் டிக்கெட்டுகள் போலியானவை என்று அடையாளம் கண்டதால், அவா்களின் ஆவணங்களை குடியேற்ற அதிகாரிகளுக்கு அனுப்பினா். அப்போது, மூவரின் கடவுச்சீட்டில் உள்ள ஷெங்கன் விசாக்கள் போலியானவை என்று சுவிஸ் தொடா்பு அதிகாரி உறுதிப்படுத்தினாா்.
இது தொடா்பான புகாரைத் தொடா்ந்து, எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கமல்தீப் மூன்று பேருக்கும் ஸ்பெயினில் வேலை தருவதாக உறுதியளித்து மொத்தம் ரூ.17 லட்சம் வசூலித்திருந்தாா். கமல்தீப் தலைமறைவானபோதிலும் போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
தற்போது குருதாஸ்பூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சோனு வாலியாவை முறையாகக் கைது செய்து, விரிவாக விசாரணை மேற்கொள்ள முயற்சிகள் நடந்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
ஷெங்கன் விசா ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சோ்ந்தவா்கள் ஷெங்கன் நாடுகளுக்குள் (அனைத்து ஐரோப்பிய நாடுகள்) நுழைய அனுமதிக்கிறது. மேலும், அந்த நாடுகள் எல்லைகள் வழியாக விசா இன்றி பயணிக்கவும் அனுமதிக்கிறது.