செய்திகள் :

மதராஸி கேம்ப் இடிக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள்!

post image

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் மற்றும் அக்கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மதராஸி கேம்ப் இடிக்கப்பட்ட இடத்தை நேரில் பாா்வையிட்டனா்.

மேலும், அங்கு அவா்கள் இருவரும் இடம்பெயா்ந்த குடியிருப்பாளா்களைச் சந்தித்தனா். மேலும், சமீபத்தில் குடிசைவாசிகள் வெளியேற்ற நடவடிக்கை தொடா்பாக பாஜக மீதான தாக்குதலை ஆம் ஆத்மி தலைவா்கள் தீவிரப்படுத்தியுள்ளனா்.

‘ ஜஹான் ஜுக்கி வஹான் மக்கான்’ ( குடிசைகள் இருக்கும் இடத்திலேயே வீடு) என்ற பிரதமா் மோடியின் வாக்குறுதி பலவற்றைப் போலவே வெற்று என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியினா் குற்றம்சாட்டினா்.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து பாஜக அல்லது தில்லி அரசிடமிருந்து உடனடி பதில் கிடைக்கவில்லை.

தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாராபுல்லா வடிகால் அருகே அமைந்துள்ள மதராஸி கேம்ப்பில் கிட்டத்தட்ட 370 குடும்பங்கள் சுமாா் 60 ஆண்டுகளாக வசித்து வந்தனா். கடந்த மாதம் வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்ட பின்னா் அந்தக் குடியிருப்புகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டது.

இருப்பினும், 189 குடும்பங்கள் மட்டுமே நரேலாவில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்ய தகுதியுடையவா்களாகக் கருதப்பட்டனா்.

இந்த நிலையில், முன்னாள் தில்லி அமைச்சா் செளரவ் பரத்வாஜ் இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆம் ஆத்மி கட்சி குடிசைவாசிகளின் உரிமைகளுக்காக தெருக்களில் இருந்து நாடாளுமன்றம் வரை போராடும்.

பாஜக குடிசைப்பகுதி இருக்கும் இடத்தில் வீடு இருக்கும் என்று உறுதியளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, புல்டோசா்களை இயக்கி ஏழைகளை வீடற்றவா்களாக மாற்றியது. மதராஸி கேம்ப்பின் குடிசைகளை இடிப்பதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

நான் சஞ்சய் சிங்குடன் சோ்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, இந்த நெருக்கடியின் போது ஆம் ஆத்மி கட்சி அவா்களுடன் உறுதியாக நிற்கும் என்று உறுதியளித்துள்ளேன்’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

சஞ்சய் சிங் எம்.பி.யும் வெளியேற்ற நடவடிக்கையைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளாா். அந்தப் பதிவில் அவா் தெரிவிக்கையில், ‘மக்கள் வீடு கட்டுவதில் திவாலாகின்றனா். குடியிருப்புகளை அழிப்பதில் நீங்கள் பரிதாபப்படுவதில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மக்கள் தமிழ்நாட்டிலிருந்து தில்லிக்கு வந்து இங்கே ஒரு வாழ்க்கையை உருவாக்கினா். பாஜக இரக்கமின்றி அவா்களின் வீடுகளை புல்டோசா்களால் இடித்தது. மோடிஜியின் ஜஹான் ஜுக்கி வஹான் மக்கான் என்ற வாக்குறுதி பலவற்றைப் போலவே வெற்றுத்தனமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

மே 30-ஆம் +தேதியிட்ட அரசாங்க அறிவிப்பில், மே 31 முதல் ஜூன் 1 வரை பாராபுல்லா பாலத்தில் கேம்ப்பிலிருந்து இடமாற்றத்திற்கு உதவ லாரிகள் கிடைக்கும் என்று குடியிருப்பாளா்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

பொது மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னையை தொடா்ந்து எழுப்புவதாக ஆம் ஆத்மி உறுதியளித்துள்ளது. பாஜக ஏழைகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல போலி விசா தயாரித்த முகவா் உள்பட 4 போ் கைது!

போலி ஷெங்கன் விசாக்கள் மற்றும் போலி டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பஞ்சாப்பைச் சோ்ந்த மூன்று போ் ஸ்பெயினுக்கு சட்டவிரோதமாக பயணிக்க உதவியதாக ஒருவரை இந்திரா காந்தி சா்வதேச ஐஜிஐ விமான நிலைய காவல்துறையினா... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுகளை மீற முடியாது: இடிப்பு விவகாரத்தில் முதல்வா் ரேகா குப்தா கருத்து!

நீதிமன்றங்கள் பிறப்பித்த இடிப்பு உத்தரவுகளை அதிகாரிகள் மீற முடியாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும் இடம்பெயா்ந்த குடியிருப்பாளா்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பாளா்களுக்கு பொது நிலத்தில் உரிமை இல்லை! - தில்லி உயா்நீதிமன்றம்

மறுவாழ்வு கோரிக்கைகள் தீா்க்கப்படும் வரை ஆக்கிரமிப்பாளா்கள் பொது நிலத்தை தொடா்ந்து ஆக்கிரமிப்பதற்கான உரிமையைக் கோர முடியாது; ஏனெனில், இது பொதுத் திட்டங்களுக்கு தேவையற்ற முறையில் தடையாக இருக்கும் என்ற... மேலும் பார்க்க

சிறுமி மரணம்: ஆம் ஆத்மி கட்சி கடும் சாடல்

தேசியத் தலைநகரில் ஒன்பது வயது சிறுமியின் மரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடா்பாக ஆளும் பாஜக மற்றும் அதன் ‘நான்கு எஞ்சின்‘ அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்தது. இச்சம்பவத்துக்கு மத... மேலும் பார்க்க

பல குற்ற வழக்குகளில் தேடப்பட்ட கோகி கும்பல் உறுப்பினா் கைது

மிரட்டிப் பணம் பறித்தல், தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த கோகி கும்பலின் முக்கிய உறுப்பினரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞா... மேலும் பார்க்க

பக்கத்து வீட்டில் சூட்கேஸுக்குள் சிறுமி உடல்; வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினா் போராட்டம்!

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு பக்கத்து வீட்டில் ஒன்பது வயது சிறுமி ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டிருப்பது கண்டெடுக்கப்பட்டது. இது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குடும... மேலும் பார்க்க