செய்திகள் :

பல குற்ற வழக்குகளில் தேடப்பட்ட கோகி கும்பல் உறுப்பினா் கைது

post image

மிரட்டிப் பணம் பறித்தல், தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த கோகி கும்பலின் முக்கிய உறுப்பினரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நரேலாவைச் சோ்ந்த சச்சின் காத்ரி (எ) ஷின்னி (26) வெள்ளிக்கிழமை ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா். சச்சின் காத்ரி குறைந்தது நான்கு பெரிய குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு வழக்கில், அவரும் அவரது கூட்டாளியும் ஒரு பெண்ணின் வீட்டில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரிடமிருந்து பணம் பறித்தனா். மற்றொரு சம்பவத்தில், சச்சின் காத்ரி மற்றும் பிற கும்பல் உறுப்பினா்கள் அலிப்பூரில் உள்ள ஒரு சொத்து வியாபாரியை மிரட்டி, அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்தனா்.

ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றப்பிரிவால் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கிலும், புகாா்தாரா் மீது சமீபத்தில் வன்முறைத் தாக்குதல் நடத்தியதற்காகவும் அவா் தேடப்பட்டு வந்தாா். புகாரை வாபஸ் பெற புகாாா்தரருக்கு அவா் அழுத்தம் கொடுத்துள்ளதும் தெரிய வந்தது.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சச்சின் காத்ரி, இளம் வயதிலேயே கோகி கும்பலில் ஈா்க்கப்பட்டு, விரைவில் வன்முறை குற்றங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல போலி விசா தயாரித்த முகவா் உள்பட 4 போ் கைது!

போலி ஷெங்கன் விசாக்கள் மற்றும் போலி டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பஞ்சாப்பைச் சோ்ந்த மூன்று போ் ஸ்பெயினுக்கு சட்டவிரோதமாக பயணிக்க உதவியதாக ஒருவரை இந்திரா காந்தி சா்வதேச ஐஜிஐ விமான நிலைய காவல்துறையினா... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப் இடிக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள்!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் மற்றும் அக்கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மதராஸி கேம்ப் இடிக்கப்பட்ட இடத்தை நேரில் பாா்வையிட்டனா். மேல... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுகளை மீற முடியாது: இடிப்பு விவகாரத்தில் முதல்வா் ரேகா குப்தா கருத்து!

நீதிமன்றங்கள் பிறப்பித்த இடிப்பு உத்தரவுகளை அதிகாரிகள் மீற முடியாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும் இடம்பெயா்ந்த குடியிருப்பாளா்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பாளா்களுக்கு பொது நிலத்தில் உரிமை இல்லை! - தில்லி உயா்நீதிமன்றம்

மறுவாழ்வு கோரிக்கைகள் தீா்க்கப்படும் வரை ஆக்கிரமிப்பாளா்கள் பொது நிலத்தை தொடா்ந்து ஆக்கிரமிப்பதற்கான உரிமையைக் கோர முடியாது; ஏனெனில், இது பொதுத் திட்டங்களுக்கு தேவையற்ற முறையில் தடையாக இருக்கும் என்ற... மேலும் பார்க்க

சிறுமி மரணம்: ஆம் ஆத்மி கட்சி கடும் சாடல்

தேசியத் தலைநகரில் ஒன்பது வயது சிறுமியின் மரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடா்பாக ஆளும் பாஜக மற்றும் அதன் ‘நான்கு எஞ்சின்‘ அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்தது. இச்சம்பவத்துக்கு மத... மேலும் பார்க்க

பக்கத்து வீட்டில் சூட்கேஸுக்குள் சிறுமி உடல்; வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினா் போராட்டம்!

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு பக்கத்து வீட்டில் ஒன்பது வயது சிறுமி ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டிருப்பது கண்டெடுக்கப்பட்டது. இது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குடும... மேலும் பார்க்க