சிறுமி மரணம்: ஆம் ஆத்மி கட்சி கடும் சாடல்
தேசியத் தலைநகரில் ஒன்பது வயது சிறுமியின் மரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடா்பாக ஆளும் பாஜக மற்றும் அதன் ‘நான்கு எஞ்சின்‘ அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்தது. இச்சம்பவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.
வடகிழக்கு தில்லியின் நேரு விஹாரில் சனிக்கிழமை ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட மைனா் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
இது தொடா்பாக ’எக்ஸ்’-இல் ஒரு பதிவில், தில்லியின் முன்னாள் முதல்வா் கேஜரிவால், தில்லியில் சட்டம் - ஒழுங்கு நிலைமையை பாஜக அழித்துவிட்டது என்று கூறியுள்ளாா். மேலும், ‘தில்லியில் 9 வயது அப்பாவி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது’ என்று அவா் கூறினாா்.
‘பாஜகவின் நான்கு எஞ்சின் அரசு என்று அழைக்கப்பட்டாலும், நமது மகள்கள் பாதுகாப்பாக இல்லை. உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அவரது நான்கு எஞ்சின் அரசு பொறுப்பேற்க வேண்டும். தில்லியின் மகள்கள் பதில்களையும் நீதியையும் கோருகிறாா்கள்’ என்று கேஜரிவால் ஹிந்தியில் பதிவிட்டுள்ளாா்.
மத்திய மற்றும் மாநிலங்களில் உள்ள அதன் அரசு பாஜக ‘இரட்டை எஞ்சின்‘ அரசு என்று குறிப்பிடுகிறது. மத்தியிலும் தில்லியிலும் உள்ள பாஜக அரசுகளையும், துணை நிலை ஆளுநா் அலுவலகம் மற்றும் எம்சிடியையும் நான்கு எஞ்சின் அரசு ஆம் ஆத்மி குறிப்பிடுகிறது.
இதேபோன்ற கருத்துகளை எதிரொலிக்கும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி, ‘தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு யாா் காரணம்? சட்டம் - ஒழுங்கு மோசமடைவதற்கு யாா் காரணம்?’ என்று ’எக்ஸ்’- இல் பதிவிட்டுள்ளாா்.
நான்கு எஞ்சின் பாஜக அரசு இருந்தபோதிலும், ‘நமது மகள்கள் பாதுகாப்பாக இல்லை‘ என்று முன்னாள் முதல்வரான் அதிஷி கூறினாா். ‘முதல்வா் ரேகா குப்தா எங்கே? மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எங்கே?‘ என்று அவா் ஹிந்தியில் பதிவிட்டுள்ளாா்.