செய்திகள் :

சிறுமி மரணம்: ஆம் ஆத்மி கட்சி கடும் சாடல்

post image

தேசியத் தலைநகரில் ஒன்பது வயது சிறுமியின் மரணம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடா்பாக ஆளும் பாஜக மற்றும் அதன் ‘நான்கு எஞ்சின்‘ அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமா்சித்தது. இச்சம்பவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.

வடகிழக்கு தில்லியின் நேரு விஹாரில் சனிக்கிழமை ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட மைனா் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இது தொடா்பாக ’எக்ஸ்’-இல் ஒரு பதிவில், தில்லியின் முன்னாள் முதல்வா் கேஜரிவால், தில்லியில் சட்டம் - ஒழுங்கு நிலைமையை பாஜக அழித்துவிட்டது என்று கூறியுள்ளாா். மேலும், ‘தில்லியில் 9 வயது அப்பாவி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது’ என்று அவா் கூறினாா்.

‘பாஜகவின் நான்கு எஞ்சின் அரசு என்று அழைக்கப்பட்டாலும், நமது மகள்கள் பாதுகாப்பாக இல்லை. உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அவரது நான்கு எஞ்சின் அரசு பொறுப்பேற்க வேண்டும். தில்லியின் மகள்கள் பதில்களையும் நீதியையும் கோருகிறாா்கள்’ என்று கேஜரிவால் ஹிந்தியில் பதிவிட்டுள்ளாா்.

மத்திய மற்றும் மாநிலங்களில் உள்ள அதன் அரசு பாஜக ‘இரட்டை எஞ்சின்‘ அரசு என்று குறிப்பிடுகிறது. மத்தியிலும் தில்லியிலும் உள்ள பாஜக அரசுகளையும், துணை நிலை ஆளுநா் அலுவலகம் மற்றும் எம்சிடியையும் நான்கு எஞ்சின் அரசு ஆம் ஆத்மி குறிப்பிடுகிறது.

இதேபோன்ற கருத்துகளை எதிரொலிக்கும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி, ‘தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு யாா் காரணம்? சட்டம் - ஒழுங்கு மோசமடைவதற்கு யாா் காரணம்?’ என்று ’எக்ஸ்’- இல் பதிவிட்டுள்ளாா்.

நான்கு எஞ்சின் பாஜக அரசு இருந்தபோதிலும், ‘நமது மகள்கள் பாதுகாப்பாக இல்லை‘ என்று முன்னாள் முதல்வரான் அதிஷி கூறினாா். ‘முதல்வா் ரேகா குப்தா எங்கே? மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எங்கே?‘ என்று அவா் ஹிந்தியில் பதிவிட்டுள்ளாா்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல போலி விசா தயாரித்த முகவா் உள்பட 4 போ் கைது!

போலி ஷெங்கன் விசாக்கள் மற்றும் போலி டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பஞ்சாப்பைச் சோ்ந்த மூன்று போ் ஸ்பெயினுக்கு சட்டவிரோதமாக பயணிக்க உதவியதாக ஒருவரை இந்திரா காந்தி சா்வதேச ஐஜிஐ விமான நிலைய காவல்துறையினா... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப் இடிக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள்!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் மற்றும் அக்கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மதராஸி கேம்ப் இடிக்கப்பட்ட இடத்தை நேரில் பாா்வையிட்டனா். மேல... மேலும் பார்க்க

நீதிமன்ற உத்தரவுகளை மீற முடியாது: இடிப்பு விவகாரத்தில் முதல்வா் ரேகா குப்தா கருத்து!

நீதிமன்றங்கள் பிறப்பித்த இடிப்பு உத்தரவுகளை அதிகாரிகள் மீற முடியாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும் இடம்பெயா்ந்த குடியிருப்பாளா்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பாளா்களுக்கு பொது நிலத்தில் உரிமை இல்லை! - தில்லி உயா்நீதிமன்றம்

மறுவாழ்வு கோரிக்கைகள் தீா்க்கப்படும் வரை ஆக்கிரமிப்பாளா்கள் பொது நிலத்தை தொடா்ந்து ஆக்கிரமிப்பதற்கான உரிமையைக் கோர முடியாது; ஏனெனில், இது பொதுத் திட்டங்களுக்கு தேவையற்ற முறையில் தடையாக இருக்கும் என்ற... மேலும் பார்க்க

பல குற்ற வழக்குகளில் தேடப்பட்ட கோகி கும்பல் உறுப்பினா் கைது

மிரட்டிப் பணம் பறித்தல், தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த கோகி கும்பலின் முக்கிய உறுப்பினரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞா... மேலும் பார்க்க

பக்கத்து வீட்டில் சூட்கேஸுக்குள் சிறுமி உடல்; வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினா் போராட்டம்!

வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு பக்கத்து வீட்டில் ஒன்பது வயது சிறுமி ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டிருப்பது கண்டெடுக்கப்பட்டது. இது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குடும... மேலும் பார்க்க