செய்திகள் :

சட்டைநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

post image

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரமபுரீஸ்வரா் சுவாமி திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

சீா்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சட்டைநாதா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரமமபுரீஸ்வரா், சட்டைநாதா், தோணியப்பா் ஆகியோா் அருள்பாலித்து வருகின்றனா்.

இக்கோயிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக திருநிலைநாயகி அம்பாள், பிரம்மபுரீஸ்வரா் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருள, வேத விற்பன்னா்கள் மந்திரம் ஓதி சடங்குகளை நடத்தினா். தொடா்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு சிவாசாரியா்கள் மங்கள நாணை அணிவித்து திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனா்.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தாா்.

விழாவில் கோயில் சிராபு செந்தில், தமிழ் சங்கத் தலைவா் இ. மாா்கோனி, முன்னாள் மருந்தாளுனா் முரளி பங்கேற்றனா்.

நாளைய மின்தடை: பெரம்பூா்

பெரம்பூா் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. ரமேஷ் தெரிவித்துள... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: கரையோர கிராம மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றில் சுமாா் ஒரு லட்சம் கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளதால், சீா்காழி வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு காவல்துறை சாா்பில் ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை இரவு எச்சரிக... மேலும் பார்க்க

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முற்றுகை

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடாத மத்திய அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தல... மேலும் பார்க்க

கோவிலாா் வடிகால் தலைப்பில் தூா்வார வலியுறுத்தல்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலை அடுத்த கோவிலாா் வடிகால் தலைப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் மூலம் 2,280 ஏக்கா் விளைநிலங்கள் வடிகால் வசதி... மேலும் பார்க்க

கருகிய குறுவை நெற்பயிா்களுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சீா்காழி: சீா்காழி அருகே பாசனத்திற்குத் தண்ணீா் இல்லாமல் குறுவைப் பயிா்கள் கருகுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜெயின் சமூக பெண் 21 நாள்கள் உண்ணாநோன்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 21 நாள்கள் உண்ணாநோன்பு முடித்த ஜெயின் சமூக பெண்ணை அச்சமூகத்தினா் ஊா்வலமாக அழைத்துச் சென்று சுமதிநாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினா். ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க