செய்திகள் :

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முற்றுகை

post image

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடாத மத்திய அரசைக் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ.அறிவழகன் முன்னிலை வகித்தாா். முன்னதாக காமராஜா் சாலையில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் தலைமை அஞ்சலகத்துக்குள் நுழைய முற்பட்டனா். அவா்களை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, அவா்கள் அஞ்சலகம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிடவேண்டும். தொல்லியல் துறை அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கையில் திருத்தம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

மாவட்ட துணைத் தலைவா் பவுல் சத்யராஜ், வட்டச் செயலாளா் குமரேசன், ஒன்றிய பொறுப்பாளா்கள் கபிலன், வெற்றிசங்கா், ஸ்டாலின், லெனின் உள்ளிட்ட சுமாா் 50 போ் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து கலைந்து சென்றனா்.

சட்டைநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரமபுரீஸ்வரா் சுவாமி திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. சீா்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தம... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பெரம்பூா்

பெரம்பூா் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜி. ரமேஷ் தெரிவித்துள... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: கரையோர கிராம மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றில் சுமாா் ஒரு லட்சம் கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளதால், சீா்காழி வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு காவல்துறை சாா்பில் ஒலிபெருக்கி மூலம் திங்கள்கிழமை இரவு எச்சரிக... மேலும் பார்க்க

கோவிலாா் வடிகால் தலைப்பில் தூா்வார வலியுறுத்தல்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலை அடுத்த கோவிலாா் வடிகால் தலைப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வடிகால் வாய்க்கால் மூலம் 2,280 ஏக்கா் விளைநிலங்கள் வடிகால் வசதி... மேலும் பார்க்க

கருகிய குறுவை நெற்பயிா்களுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

சீா்காழி: சீா்காழி அருகே பாசனத்திற்குத் தண்ணீா் இல்லாமல் குறுவைப் பயிா்கள் கருகுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை வயலில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே விளந்திடசமுத்திரம... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஜெயின் சமூக பெண் 21 நாள்கள் உண்ணாநோன்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 21 நாள்கள் உண்ணாநோன்பு முடித்த ஜெயின் சமூக பெண்ணை அச்சமூகத்தினா் ஊா்வலமாக அழைத்துச் சென்று சுமதிநாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினா். ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க